அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, November 19, 2012

அடையாள புருசர்கள் யார்?

 

எங்கு நோக்கினும் மோகம் எங்கு நோக்கினும் வன்முறை. எதற்கெடுத்தாலும் கோபம் இதன் பெரும் பங்களிப்பு எவைகளுக்கெனில் அதை நான் சொல்லிதெரியவேண்டியதில்லை உலகிற்கே தெரிந்ததுதான் ஆனாலுமதனை யாரும் புறக்கணிப்பதாகவும் இல்லை, பலர்  மூன்றுமணி நேர சந்தோஷம் தன் வாழ்நாளைவரை நிலைக்கப்போகிறதென்றே நினைக்கிறார்கள். இங்கே நான் யாரையும் எந்தக் குறையும் சொல்லவேண்டுமென்ற நோக்கமில்லை. அழிவை நோக்கி போய்கொண்டிருக்கும் இவ்வுலகில், இருக்கும் கொஞ்சநாளிலாவது நல்லவைகளை தெரிந்துகொண்டு. நல்லதோடு அல்லது நல்லவர்களோடு அல்லது நல்லவர்களையாவது அடையாளங் கண்டுகொள்வோமே! வரும் தலைமுறைக்கும் காட்டிவிட்டுபோவோமே! என்ற ஆதங்கம்தானே தவிர இப்பதிவிற்க்கு வேறு காரணங்களில்லை!

விசயத்திற்க்கு வருகிறேன்.
----------------------------------------------

இன்று உலகத்தை ஒருவகையில் அல்ல பலவகைகளில் ஆட்க்கொண்டு கிடப்பதும், ஆட்டிவைப்பதும், எது என்றால் அது மீடியாக்கள்தான். இவைகளுக்கு இணையாக தற்போது இணையங்களும் செயல்பட்டுவருகிறது. எதை ஒன்றை சொல்லவேண்டுமென்றாலும் அல்லது எதை ஒன்றை செய்யவேண்டுமென்றாலும் தேவைப்படுவது மீடியாக்களே!

ஒருவர் இன்னாரென்று அறிமுகப்படுத்தப்படவும், இன்னார் இப்படியாப்பட்டவரென இடித்துறைக்கப்படவும், தேவைப்படுவதும் இவைகளே! ஆக மக்களின் அங்கமாக சிலருக்கு அன்றாட தேவையாகவே மாறிவிட்டது இவைகள். ஆகவே இவைகளால் நல்லதை செய்யவும் இயலும். கெட்டதை அதிகம் பரப்பவும் முடியும்.

இப்பொழுதெல்லாம் பொது இடங்களிலோ அல்லது பெரியவர்களின் மத்தியிலோ அல்லது பண்பெரும்மேடையிலோ ஒரு குழந்தையை. ஏன் உங்கள் குழந்தைகளையே அழைத்து நீ எதிர்காலத்தில் யாரைபோல்வர ஆசை எனக்கேளுங்களேன். உடனே அதன் நாவிலிருந்து வரும் வார்த்தை நான் இன்ன நடிகரைபோல் வரனும். அவரைபோல் சண்டையிடனும். இன்ன நடிகையைப்போல வரனும் அவரைபோல் அழகாய் ஆடனும் என்று சொல்லும். உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும் எனக்கேட்டால் சினிமாக்காரர்களையும். குத்துச்சண்டை கிரிகெட் வீரர்களையும் அடிதடி தாதாக்களையுதான் அடையாள புருசர்களாக. அதாவது ரோல்மாடல்களாக சொல்கிறார்கள்
 
இது அவர்களின் பிழையல்ல அல்லது அவர்கள் சொல்லபடும் பெயருக்குறியவர்களின் தவறுமல்ல. தவறு தன்வீட்டிலிருந்தே ஆரம்பமாகிறது. மீடியாக்களின் வாயிலாக யார் அடையாளப்புருசர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்களோ.அதுவும் தன் தாய் தந்தைமூலமாகவே அவர்கள் அந்த குழந்தைகளின் அடையாளப்புருசர்கள். பேருக்காக எப்பவாவது ஒருநாள் காந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிதந்தார். அறிஞர் அண்ணா அதை செய்தார். காமராஜர் இதைசெய்தார் .முகமது நபி இதைசெய்யக்கூடாதென்றார் என சொல்லிவிட்டால் போதுமா?

குழந்தைகளின் மனதில் எது பதிகிறதோ அதுவாகவே நாளை அதுமாறும் அதனை உணராதவரா நீங்கள்?. உங்களுக்காக வாழ்ந்த வாழ்க்கையைவிட உங்கள் குழந்தைக்காக வாழும்வாழ்க்கையை சரிவர செய்யத்தவறினால் நாளை நஷ்டமடைவது யார்?
 
சரி இதில் நஷ்டமைடைவதெப்படி எல்லாம் நம்மவீட்டில் இருக்கும் டீவி என்ற மீடியாவின் வழியாகதான்.
எந்த ஒரு நிகழ்ச்சியும் அல்லது எந்த ஒரு சபையிலும் கலைத்துறை. விளையாட்டுத்துறை அதிலும் குறிப்பான விளையாட்டுத்துறை, அங்கீகாரமென்ற ஒன்று அவர்களுக்குதான் வழங்கப்படுகிறது.
 
அதனோடில்லாமல், சுதந்திர தினமா? குடியரசு தினமா அதற்க்கும். குழந்தைகள் தினமா? அட பிறரின் நினைவு தினமா? அனைத்திக்கும் சினிமாதான் சிறப்பு நிகழ்ச்சிகளாக!
 
மீடியாக்களை திறந்தாலே ஒன்று சினிமா அல்லது அதன் நடிகர் நடிகளின் பேட்டி அவர்களின் நடனம் அவர்களைச்சார்ந்த விசயங்களென அதனை மிகைப்படுத்தியும் மேன்மைப்படுத்தியும் காண்பிக்கப்படுகிறது!
அதோடில்லாமல் குறிப்பிட்ட துறைகளைச்சார்ந்தவர்களை மட்டுமே சாதனையாளர்ளென்றும், சிறந்த திறமைசாலிகளென்றும், வருடாவருடம் ஒவ்வொரு மீடியாக்களும், ஆக வருடமுழுவதும் அடையாளப் படுத்தபடுகிறார்கள்
 
 இவர்களே உழைப்பு திறமை இருக்கும் எவர்களையும் அடையாளம் காட்டுவதில் தவறில்லை ஆனால் அவர்களையே  அடையாளப்படுத்துவது சரியாகுமா?
 
 மற்றவர்களின் திறன்களுக்கும் அவர்களின் சாதனைகளுக்கும் ஒரு சல்யூட் மட்டும்போதுமா? என்றாவது ஒருமுறை கெளரவப்படுத்தினால் தகுமா? அவர்களுக்கு என்றாவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி போதுமானதாகுமா?
எந்த எந்த காலக்கட்டத்தில் எதன் எதற்க்கு எதை செய்யவேண்டுமோ அது அதனை சரிப்பட செய்யத்தான் வலிமைவாய்ந்த மீடியாக்கள் உருவாகின.
ஆனால் காலப்போக்கில் அனைத்துமே எதையோ மட்டுமே சார்ந்து கிடப்பது வேதனைக்குறிய விசயமாக இருந்துவருகிறது.
 
குழந்தைகள் பத்திரிக்கைகள் [விரும்பி] படிப்பதில்லை.அப்படியே படித்தாலும் முழுச்செய்தியையும் உள்வாங்கப் பொருமையில்லை ஆனால் பள்ளிவிட்டு வந்ததும். டீவி முன்புதான் அனைத்துமே செய்கிறார்கள், சாப்பிடுவதிலிருந்து உறங்குவதுவரை அதனை திறந்ததும் அதில் வரும் விசயங்களை மனதில் பதியவைத்துக்கொள்கிறார்கள், நாளடைவில் தானும் அதில் ஒரு அங்கமாக அதனோடு பின்னிப்பிணைகிறார்கள்.
 
நாளை இந்தியா வல்லரசாகுமா! ஆகாதா! அதெல்லாம் அப்புறம். ஆனால் நாளைய இளைஞர்கள் நல்லவர் ஆவார்களா!  என்பதுதான் முக்கியம். ஏனெனில் நாளை இந்தியாவை வல்லரசாக்க, நல்லவர்களாக இருந்தால்தான் வல்லரசாகும், வல்லரசாக ஆகும்  இந்தியா நல்லரசாக இருக்கும் இல்லையெனில் சாத்தான் கையில் மாட்டிய சக்தியாய் மாறி சகலத்தையும் அழித்துவிடும்.

எந்த ஒரு  விசயங்களை அடிக்கடி காணக்கிடக்கிறதோ அல்லது கேட்ட கிடைக்கிறதோ அதைத்தான் ஏற்கும் மனசு, அதிலும் குறிப்பாக இளம் மனசு. அடிக்கடி இவர்களெல்லாம் வந்து விருது வாங்குறாங்களே அப்போ இந்த துறையை தேர்ந்தெடுத்தாந்தான் நாளை நாமும் அடிக்கடி இதுபோல் விருதுகள் பரிசுகள் வாங்கிக்குவிக்கலாம் என்ற எண்ணம் அங்கே மேலோங்கப்பட்டு அதுவே அதாகிபோகும். அதுபோல்தான் எந்த ஒரு விசயங்களை மீடியாக்களும் பிரபலப்படுத்துகிறதோ அதைத்தான் இன்றைய இளம்பிஞ்சுகளின் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்துவிடுகிறது வீட்டிலாகட்டும் மீட்டியாக்களாகட்டும் குழந்தைகளுக்கு அடையாளப் புருசர்களை [ரோல்மாடல்களை] அடையாளம் காட்டுவதில் மெத்தனப்போக்குகள் கடைபிடிக்காத்தீர்கள்.

அடையாளப் புருசர்களை அடையாளம் காட்ட உலகில் எவ்வளோ பேர்கள் இருக்கிறார்கள் எத்தனையோ துறைசார்ந்தவர்கள்  இருக்கிறார்கள்.நல்லோர்கள். நல்லது செய்தவர்கள். சாதனையார்கள். என இறந்தவர்களும் இருக்கிறார்கள் இன்னும் இருந்துக்கொண்டும், உருவாகிக்கொண்டும் இருக்கிறார்கள்,
 
 கருணை உள்ளங்களாய்..கல்வி கொடுக்கும் வல்லல்களாய் சேவைமனப்பான்மையுடையோர்களாய் அறிவியல் விஞ்ஞானிகளாய். அறிஞர்களாய். எழுத்தாளர்களாய். வெளியுலகம் அறியாமலே தன் திறமைகளை உள்ளடக்கி வெளிக்கொண்டுவரத்தெரியாத திறமைசாலிகளாய், புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் இளைய சமுதாயங்களாய், இன்னும் இன்னும் எத்தனை எத்தனையோபேர் உலகில் வாழ்கிறார்கள். அவர்களை அடையாளம்கண்டு மீடியாக்கள் அடிக்கொருதரம் நினைவு கூறட்டுமே! எடுத்துசொல்லட்டுமே! அவர்களை ஊக்குவிக்கும்வகைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்களை அழைத்து அடையாளப் புருசர்களாய் அடையாளம் காட்டலாமே!
 
ஆடிக்கொருதரம் அம்மாவசைக்கொருதரம் இவர்கள்தான் அவர்களென அடையாளம் காட்டப்படுவதிலோ நினைவுகூறுவதிலோ  சிறிதளவேனும் பிரயோசனமில்லை.

சிறப்பு நிகழ்ச்சிகள் என எப்போதெல்லாம் போடப்படுகிறதோ அப்போதும். தினம் தினம் அழுதுவடியும் சீரியல்களுக்கு மத்தியிலும். தினம் தினம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் அது மத்தவர்களுக்கு திண்டாட்டாம் எனவும். கோடிக்கோடிகளாகவும். வீடுகளாகவும். கார்களாகவும். ஓரிருவருக்கே கொடுத்துவிட்டு மற்ற பிஞ்சு மனங்களை ஏமாற்றுவதோடு தன்னம்பிக்கை இழக்கச்செய்யும் நிகழ்வுகளுக்கு மத்தியில்,
 
 சிறிதளவேனும் சின்னசிறார்களும் சிந்திக்கும் வகையிலும்,அவர்களின் மனங்களும் உடல்களும் சீரழியாமல் இருக்கும் வகையிலும். நாட்டின் தலை சிறந்தவர்கள் இவர்கள்தான் அவர்களைபோல் நாமும் வரவேண்டுமென்ற தன்னம்பிக்கையை ஊட்டும் நிகழ்ச்சிகளை தொகுத்தால் நாடும் நலம்பெறும் நல்லவர்களும் வல்லவர்களும் திறமைமிக்கவர்களும் இவ்வுலகிற்க்கு அடையாளம் காட்டப்படும் அடையாளப் புருசர்களாக! குழந்தைகளின் ரோல்மாடலாக! நாளை இவர்கள் தங்களின் வாரிசுகளுக்கே அடையாளப் புருசர்களாகுவார்கள் நிச்சயமாக!

அன்புடன் மலிக்கா

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சும்மா 'நச்' என்று சொல்லிட்டீங்க...

நல்ல பல கருத்துகளுக்கு நன்றி...
tm1

Unknown said...

நல்ல பதிவு . நன்றி

தமிழ் காமெடி உலகம் said...

மிகவும் அருமையான பதிவு......உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Jeffrey said...

Grateful for shariing this

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.