அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, January 19, 2012

வலைதளத்தில் ஆரம்பித்த உறவு வியாபாரம் வரை.


வலைதளத்தில் ஆரம்பித்த எங்கள் உறவு, இன்று குடும்ப உறவாகி, இரு சகோதரிகள் சேர்ந்து பிசினஸ் செய்யும் அளவிற்க்கு கொண்டுவந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

நாங்களும் ஆரம்பிச்சிட்டோம் என்னாத்த கடையத்தான். வீட்டிற்குள்ளேயே மாடியில்   புர்கா மற்றும் பேன்ஷி ஐயிட்டங்கள் அனைத்தும் துபையிலிருந்து வரவழைத்து தருகிறோம் [வெட்டியாதானே இருக்கோம். சும்மாயிருந்தா வெட்டிக்கதைதானே பேசிக்கிட்டு இருப்போம் அதேன் இப்படியொரு ஏற்பாடு] இது சென்னை பிளாசாவின் ஒரு அங்கம்தான் இந்த மலிக்கா பிளாசா [ஹா ஹா] அதன்ன சென்னை பிளாசா என்கிறீர்களா? அது நம்ம சமையல் அட்டகாசம் ஜலிலாக்காவோட கடைதான். சென்னையில் இருக்கு.

நான் கொஞ்சம் டிசைன் செய்வேன் [அட நம்புங்கப்பா] அதை வைத்து நானாக டிசைன் போட்டு ஆடர்செய்து புர்கா போடுவேன். ஜலிக்காவீட்டுபோயிருந்தபோது புர்காவைபார்த்து நல்லாயிருக்கே என்றதோடு. சென்னை பிளாஷாவின் விபரம் சொன்னார்கள்[ 1 வருடம்தான்] ஆகிறதென்றார்கள்.

நான் ஊருக்கு வந்திருந்தபோது சிலர் என் புர்காக்களை கண்டுவிட்டு இதேபோல் கல் மற்றும் டிசைனில் எங்குகிடைக்கும் வாங்கி தருகிறாயா? என கேட்டதும் டக்கென ஜலிக்கா நியாபகம். உடனே மெயில் செய்து கேட்டேன். கேட்டதும் உடனே  புர்கா அனுப்பிவிட்டார்கள் சென்னையிலிருந்து.

வந்தெல்லாம் மிகவும் காஸ்டிலியாக இருந்தது. உடனே மெயில் அனுப்பினேன் அக்கா இது டவுனல்ல, கிராமம்தான் இங்குள்ளதற்க்கு தகுந்தார்போல் இன்ன விலையில் இப்படி டிசைனில் இன்ன சைசில் இருக்கவேண்டும் என போட்டோக்கள் எடுத்து அனுப்பினேன்.
அதோடு பேன்ஷி ஐயிட்டங்களும் வேண்டும் என்றேன்

அடுத்த 15 நாளில் கூரியரில் வந்துவிட்டது மாசா அல்லாஹ் நினைத்தபோல் இருந்தது வியாபரமும் அல்ஹம்துல்லிஹ் என இருந்தது இதையே ஏன் தொடர்ந்து செய்யக்கூடாதுன்னு முடிவுசெய்து, 3 வது பார்சல் வந்துவிட்டது .4,வதுக்காக வெயிட்டிங்க்.

அதிகம் மற்றும் குறைவான விலைகளில் அதாவது 1000.திலிருந்து 4000 வரை புர்கா மாடல்கள் இருக்கு. துணிகள் மற்றும் ஸ்டோன்கள் தரமானதாக இருக்கும். தற்போதுள்ள அனைத்து டிசைன்களும் ஒரிஜினல் ஸ்டோன்கள் மற்றும் உயர்ரக துணிவகைகள்.

மக்களின் தேவையறிந்து, அவர்களின் பொருளாதாரம் அறிந்து, வியாபாரம் செய்தால் இன்ஷா அல்லாஹ் ஒரு நிலையான வியாபாரத்தை நிலைநிறுத்தலாம். இறைவனின் உதவியால் தொடங்கிவிட்டோம். அவனே நல்லமுறையில் நடத்தித்தரவேண்டும்.

சகோதரிகளாய் நாங்க தொடங்கியுள்ள இந்த பிசினஸ் எந்தளவு சக்சஸாகும் என்பது இறைவனிடத்தில்தான் உள்ளது. நல்லதே நாடுவான் என்ற நம்பிக்கையோடு
தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும்  பிராத்தனைகளையும் என்றும் எதிர்பார்கிறோம்.

சரி வந்ததுதான் வந்தீங்க கொஞ்சம் டிசைனையும் பார்த்துவிட்டு போங்களேன்.
வேண்டுமெனில். போனை எடுங்க, நம்பரை போடுங்க, மாடல் சொல்லுங்க, உடனே அனுப்பி வைக்கிறோம்..











எப்படியிருக்கு டிசைன்கள் மற்றும் மாடல்கள். இதுபோல் பலமாடல்கள் இருக்கிறது இங்கு சென்றும் பாருங்கள். மாடல் நம்பர்களை பார்த்து அந்த மடல் வேண்டுமென்று சொன்னால் கூரியரிலும் அனுப்புவோம். கூரியர் சிலவும் சேர்த்து பணம் அனுப்பவும்.[என்னாம்மா யோசிக்கிறாங்ப்பு! பாவங்க பச்சபுள்ளைங்க இப்பதான் வியாபராம் ஆரம்பிச்சிருக்கு]

புக்கா மற்றும் மஃப்தா. ஹெட்கவர். மற்றும் பேன்ஷி ஐயிட்டங்கள்.
ஸ்டோன் வளையல், ஸ்டோன் நெக்லஸ், ஸ்டோன் கம்மல்,ஸ்டோன் கிளிப், ஸ்டோன் ஹேர் கிடிக்கி,கிரஸ்டல் மணிவகைகள்.ஹேண்ட் பேக் .ஸ்டோன் புர்கா பின்.ஸ்டோன் கொண்டை வலைகள். இன்னும் இன்னும் நிறைய ஐயிட்டங்கள்.

அனைத்தும் துபையிலிருந்து வரவழைத்து தருகிறோம் . என்ன விதமாக வேண்டுமென்றாலும் அதுபோல் சைஸ் மற்றும் ஸ்டோன் என தங்களுக்கு வேண்டுமெனில் ஆடரின் பேரிலும் புர்கா தைத்து தரப்படும்.அதேபோல் வீட்டு பொருள்கள். மற்றும் பெட்ஷீட். கம்போர்ட் என்ன வேண்டுமென்றாலும் தேவையெனில் என்ன மாடல் எப்படி என சொன்னால் அதையும் வரவழைத்து தருவோம்..

ஆடர்களுக்கு தொடர்புக்கொள்ள
என் ஈமெயில் மற்றும் போன் நம்பருக்கும் தொடர்பு கொண்டு ஆடர்கள் கொடுக்கலாம்..
fmalikka@yahoo.in
9578167664.

இதிலும் டிஸ்கி போடாங்காட்டி நல்லாயிருக்காதுல்ல.

டிஸ்கியோ டிஸ்கி:
அதனோடு. சுடிதார்கள் மற்றும் ப்ளவுஸ்களும். குழந்தைகளுக்கான கெளவுன்களும்[மாடல்கள் தரனும்] தைத்து தரப்படும்..


என்றும்  உங்கள்
அன்புடன் மலிக்கா


Thursday, January 5, 2012

வள்ளியே சக்கர வள்ளியே!


அடடா வள்ளிக்குள் இத்தனை சத்துக்களா!!!!!!!!!
வள்ளியே சக்கர வள்ளியே!
உனக்குள் இத்தனை சத்துக்களா!
சக்கரை நோயுள்ளவங்க மற்றும் வாய்வுக்கோளாறு உள்ளங்களை கிழங்குவகையே சாப்பிடக்கூடாதும்பாங்க. நாக்கு ருசி யாரைவிட்டது. ஒருதடவை திண்ணாயின்ன திண்ணுசாவோம் என்கிறாங்க. ஹா ஹா..

சக்கரவள்ளிக்கிழங்கை அவித்து அதை உரித்து அதன் சதையை எடுத்து நாங்க போட்டுள்ள தாவணியின் துணியை தண்ணீர்ல் அலசிவிட்டு அதில் வைத்து சுற்றி சிறிய முட்டைபோல் செய்து பிழிந்து பிழிந்து சாப்பிடுவோம். சிலருக்கு கனமான தாவணியாயிருந்தால் வராது எனக்குதான் சூப்பரா வருது உனக்கு வரலையே வவ்வவவ்வ என ஆத்திரமூட்டி விளையாண்ட   அந்த காலமெல்லாம் ஹூம் திரும்பாது


இதோ வள்ளியப்பத்தி விளாவரியா விளக்குறாங்க கேளுங்க..

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று. இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை. இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.

வள்ளியின் சரித்திரம்: 

இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர். கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர். அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை. இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.
வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.

1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.

2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர். உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.

இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.
தேர்ந்தெடுப்பது: கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும். வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல்:
சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

உணவுச்சத்து: 
அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.
ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 130, கொழுப்புச்சத்து 0.39 கிராம், புரோட்டின் 2.15 கிராம், கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம், நார்ச்சத்து 3.9 கிராம், சோடியம் 16.9 மில்லிகிராம், பொட்டாசியம் 265.2 மில்லி கிராம், கால்சியம் 28.6 மில்லி கிராம், விட்டமின் சி 29.51 மில்லி கிராம், விட்டமின் ஏ-26081 IU.

சமையல் வகைகள்:
சாலட், ஜூஸ், சூப்: சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும். ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது. வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.
பாயசம்: இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.

என்ன வள்ளிதேடி போறிங்களா. அட அந்த வள்ளியை அல்ல அப்புறம் வள்ளியோட அவர் அடிக்கவந்துடுவார். நீங்க  சக்கரவள்ளியை தேடிப்போங்க...

எனக்கு மெயில்வழி வந்த இச்செய்தி உங்கள் பார்வைக்கும்.
.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.