அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, August 25, 2015

சுடச்சுட... [முதன்மைச்செய்தியில்]




சில தடைகளுக்கு பின் போராடி,
 மணி வேக வேகமாக அந்த பிரபல பத்திரிக்கை அலுவலகத்தினுள்ளே நுழைந்தார்,
யாரிங்கே நியூஸ் எடிட்டர் எனக்கேட்ட மணியின் கேள்விக்கு
வலப்புறம் நீட்டிய விரலின்பக்கம் கோபமாக  விரைந்து செல்லும் மணியை நோக்கியே,அங்கிருந்த அனைவரின் கவனமும்   இருந்தது.

சாத்தியிருந்த கண்ணாடிக் கதவையும்தாண்டி மணியின்குரல் கனீரென
வெளியே ஒலித்தது,மனசாட்சியே இருக்காதா உங்களுக்கெல்லாம்,பத்திரிக்கை நடத்தினால் எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் செய்யலாமென்ற  தைரியமா?
பத்திரிக்கை நடத்துவதெற்கென்ற  தர்ம நியாயமெல்லாம் கிடையாதா? 
எந்த செய்தி கிடைத்தாலும் அதனை ஒன்றுக்கு மூன்றாக்குவதே உங்களுக்கெல்லாம் வேலை
அடுத்தவரின் வேதனைகளையும் காயங்களையும் வைத்து  நீங்கள் சம்பாதிக்கிறீர்களே?காசுள்ளவன் குசுவிட்டால் நாறாத நாத்தம், காசில்லாதவன் விட்டால் காசிவரைக்கும் நாறுகிறதே எப்படிங்க! 
ஏழைகளென்றால் பரபரக்கும் செய்தியாக வெளியாகுகையில்! பணக்காரர்களென்றால் பார்த்துப் பதுங்குகிறதே ஏனுங்க?

என் பொண்ணு எங்கக்கிட்ட கோவிச்சிகிட்டு 1 வாரம் அவ தாய்மாமன் வீட்டுக்கு போனதை,
அக்கம்பக்கதிலுள்ளவங்க ஆயிரம் முடிச்சிப்போட்டுபேச அதை எப்படியோ உங்க காதுக்கு எட்ட முழுமையா விசாரிக்காம கதை கதையா திரிச்சி

”பதினாறு வயது பருவம் படிதாண்டியது” யாரிடமும்  சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம்” ஓடியபெண்ணை தேடித்தேடி பெற்றோர்கள் திண்டாட்டம் என்று 
”சுடச்சுட” முதன்மைச் செய்தியில்போட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கீங்களே! என்னங்க நியாயமிது ஒருசெய்தியை அரைகுறையா கேட்டு, உருவமேயில்லா ஒன்றுக்கு கைகால் ஏற்படுத்தி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிபோட்டு,அடுத்தவங்கள கேவலப்படுத்தி வயிற எரியவிட்டு அதில் நீங்க குளிர்காய்கிறீங்களே கேட்க யார் வரப்போறாங்க என்ற தைரியம்தானே! அப்படியே வந்தாலும் எதையேனும் சொல்லி சமாளிச்சிடலாமென்கின்ற திமிர்தானே இப்படியெல்லாம் ஆடுறீங்க!

ஒட்டுமொத்தமா ஒன்னு கேட்கவா!
உங்க வீட்டு பிள்ளைங்களோ,அல்லது உங்களின் நெருங்கிய உறவுகளோ! கூத்தடிக்க கிளப்பிற்கு போனாலோ! கூடிக்களிக்க மகாபல்லிபுரம் போனாலோ! அப்படியிப்படின்னு கோடி கோடியா சுருட்டினாலோ! 4,5 சின்னவீடு, பெரியவீடு வச்சிருந்தாலோ! அல்லது, நடுரோட்டில் நாயைவிடக் கேவலமாக நடந்தாலோ! அல்லது காதலென்ரபேரில் கர்ப்பமாகி வந்து நின்றாலோ! அல்லது யாருடனும் ஓடிப்போனாலோ! சுடச்சுட செய்தியாக்குவீங்களா? அல்லது முதன்மைச்செய்தியில் போட்டு முன்னுரிமை கொடுத்து சந்தோஷப்படுவீங்களா!

உங்களுக்கென்று வரும்போதுமட்டும் மானம்,கெளரவம்!அதே பிறருக்கென்று வரும்போது வேடிக்கை விளையாட்டா! என தன் நெஞ்சடைக்க, விழிகள் செந்நீரைச் சுரக்க, வார்த்தைகளை சூடாக்கி சப்தமிட்டபோது,வேதனை கலந்த ஆதங்கம் எதிரொலித்ததை உள்வாங்கி,சப்த நாடியையும் அடக்கி, சத்தமில்லாமல்  கேட்டு நின்றன பத்திரிக்கை அலுவலகமும்,அதன் பணியார்களும்..

டிஸ்கி//
இது எனது முதல் குட்டிக்கதை முயற்ச்சி..
எப்படியிருக்கு சொல்லிட்டுபோனா நல்லாயிருக்கும், இல்லாட்டி அழுவேன் சொல்லிட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்

Saturday, February 7, 2015

தாய் என்பதில் பெருமிதம்...


திருச்சங்கோடு KSR பாலிடெக்னிகல் காலேஜில் முதலாம் ஆண்டு ஆட்டோ மொபைல் படிக்கும் எனது புதல்வனுக்கு இன்றோடு 15 வயது நிறைவு பெற்று 16 வது வயத்துக்கு அடியெடுத்து வைக்கும் அவரை வாழ்த்தியபடியே,


இவ்வருடத்திம் முதல் செமஸ்டர் மார்க் விபரம்,மற்றும்
இரண்டாம் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்வில்,
ஹெச்சோடி தி செந்தில்நாதன் அவர்கள்  முதல் மற்ற ஆசிரியர்கள் வரை எமது மகனார் மரூஃப்பைதான் முதலில் வருவான் என்ற நம்பிகையில் இருந்துள்ளார்கள் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் மேடையில் பேசியபோது மனம் ஆனந்தத்திலும் கண்கள் ஆனந்தகண்ணீரிலும்
மிதந்தது.
 அவனின் குணநலன்கள் மற்றும் அவன் நடந்துகொள்ளும்விதம் படிப்பில் அவன்காட்டும் அக்கரையென
மகனைப்பற்றி ஆசான்கள் கூறக்கேட்டு பெற்றோர்களான எங்கள் உள்ளம் ஆனந்தக்கூத்தாடி மகிழ்ந்தது .



இன்னும் கொஞ்சம் விளையாட்டுதனத்தைவிட்டுவிட்டு கவனம் முழுவதையும் படிப்பில் கொண்டுவந்தால் மிகசிறந்தவானக வருவான் என்ற அறிவுரையும் சான்றோர்சொல்லகேட்டபோது நிச்சயம் செய்கிறேன் என்ற அவனின் உறுதி மேலும் நம்பிக்கையை தந்தது


எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்பினிலே
என்ற மகவுகளுடைய நல்லதும் கெட்டதும் தாயையே சாரும் என்பதை
உணர்ந்து
 அவனின் முகவரி நான் என்பதை விட ” எனது முகவரி அவன்” எனும்எல்லையைத்தொடும்போது  மனம் மகிழ்வுகாணும் மரணம் வந்தபோதும் மனம் நிறைக்கொள்ளும்.

இறைவன் நாடினால்
இன்னும் எங்கள் மகனார் சிறப்புபெற்று எல்லோரிடத்திலும் அன்புபாராட்டி
எல்லோரும்போற்றும்படி வளர்வான் என்ற நம்பிக்கையில் இறைவனிடம் வேண்டியபடி,,

என்றும் அன்புடன்

Thursday, January 15, 2015

சுடச்சுட பசுநெய் ஆப்பம்..




தேவையானவை
ஆப்பமாவு 5, கரண்டி [இது புழுங்கல் அரிசியில் அரைத்த ஆப்பமாவு]
பசுநெய் தேவையான் அளவு
முட்டை 4
உப்பு
சோடாப்பு
கருவேப்பில்லை


ஆப்பமாவுடன் பசுநெய். முட்டை [நன்றாக அடித்து அதனுடன் சேர்க்கவும்] உப்பு சோடாப்பு கருவேப்பில்லை [நறுக்கியும் போடலாம்]  சேர்த்து கலக்கைக்கொள்ளவும்
ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய கரண்டியில் 2 கரண்டி எடுத்து ஊற்றவும்
2. நிமிடம் மூடி வைக்கவும்
திறந்து திருப்பிப்போடவும்
இருபுறமும் வெந்து சிவந்ததும்

எடுத்து பரிமாறவும்.
இதற்கு எங்க பகுதி பக்கம் ஜீனி  தூவி சாப்பிடுவோம். காரத்துடன் சாப்பிட இதற்கு முட்டைகுழம்பு,அல்லது
சிக்கன் மட்டன் குழம்பு, தொட்டு சாப்பிடலாம்
நல்லவாசனையோடு படு சூப்பராக இருக்கும்

 டிஸ்கி//இந்த சாக்லெட் மெல்டானதும் மஃரூப் அதில் தடவி சாப்பிடுவான்.
பசங்களின் டேஸ்டே வித்தியாசமானதுதானே..

 [அன்பர் 3 வரின்  வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இங்கே ..மீள்பதிவு ]


நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.