அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, October 26, 2009

கலவைச்சோறு


தேவையானவைகள்

அரிசி 2 கப்
கொத்துக்கறி 1/4 கிலோ
தக்காளி 1
[பெரிய வெங்காயம்]பல்லாரி 1
கேரட்1
மத்தங்காய் 1கப்
பாலக் [கீரை] 1/2 கட்டு
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
காளிப்ளவர் 1 கப்
ப்ளாக் ஐ, பயர் [காராமணீயாம்] 1 கப்
பச்சைமிளகாய் 2
உப்பு
ஆயில்
கொ,மல்லி
பட்டை ஏலக்காய்,கிராம்பு பிரிஞ்சிலை,
தாளிக்க கடு கருவேப்பில்லை
[பொடிக்க]
கடலைப்பருப்பு கொஞ்சம்
காய்ந்தமிளகாய் 2
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
இவைகளை வெரும் வானலியில் வறுத்து நைசாக அல்லாமல் பொடித்துக்கொள்ளவும்]

அரிசியையும், பயரையும், நன்றாக அலசிவிட்டு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
கீரை காய்களை நறிக்கிக்கொள்ளவும், கொத்துக்கறியை தண்ணீர்விட்டிஅலசி வடிகட்டியில் வடிக்கத்துக்கொள்ளவும்


ஒரு அகலமான சட்டியை அடுப்பில்வைத்து அது காய்ந்ததும் தேவையான அளவு ஆயிலூற்றி அதுசூடானதும் பட்டை பிரிஞ்சி இலை ஏழ்க்காய் கிராம்பு அனைத்தும்போட்டு வாசனைவந்ததும்


நறுக்கிய [வெங்காயம்]பல்லாரி தக்காளியை போடவும்


அது வதங்கியதும் மற்ற நறுக்கிவைத்துள்ளகாய்களை போடவும்அதுவும் வதங்கயதும் இஞ்சிபூண்டுவிழுதைபோட்டு கிளறிவிட்டு


அதன்மேல் ஊறவைத்த பயரையும் கொத்துக்கறியையும்போட்டு


தேவையான அளவு தண்ணீர்விட்டு



கொதித்து வந்ததும் ஊறவைத்திருக்கும் அரிசியைப்போடவும்


அது செட்டாகும்வரை தீயை மிதமாகவைத்து மூடிவைக்கவும்



பதத்துக்கு வந்ததும் திறந்து அதன்மேல் பொடித்துவைத்த பொடியை போட்டு நன்றாக கிளறிவிடவும்

அடிபிடித்துவிடாமல் கிளறிவிட்டு நன்றாக செட்டானதும் கருவேப்பில்லை கடுகுபோட்டு தாளித்து அதன்மேல் ஊற்றவும்


மீண்டுமொருமுறை கிளறிவிட்டு கொ,மல்லி பொடியாக நறிக்கி தூவவும்


இப்போது சூடான சுவையான நல்ல ஹெல்தியான உணவு தயார்,
இதற்கு உருலைக்கிழக்கை பொறித்து அதன்மேல் அலங்கறித்து பறிமாரவும்.
சைடிஸ் இல்லாமலே சாப்பிட சூப்பராக இருக்கும் வேண்டுமென்றால் தயி பச்சடி வைத்துக்கொள்ளலாம், இன்னும் கொஞ்சம் ரிச்சாக முட்டை வேகவைத்து பொறித்து சாப்பிடலாம்..

அன்புடன் மலிக்கா


Saturday, October 24, 2009

ஸ்பெஷல் சிக்கன்



தேவையானவை

சிக்கன் ½ கிலோ

பல்லாரி 2

தக்காளி 2

பட்டை, ஏலம் ,கிராம்பு, கொத்தமல்லி,

சீரகம் சோம்புப்பொடி 2

ஸ்பூன் மிளகாய்தூள் 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்

பொட்டுக்கடலை கொஞ்சம்

தேங்காய் கால் கப்

முந்திரி 15

இடியப்பமாவு 2ஸ்பூன்

ஆயில், உப்பு.


சிக்கனை நன்றாக சுத்தம்செய்துகொண்டு,  மீடியமான அளவில் கட்செய்து அதில் உப்பு சீரக்சோம்புபொடி இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு ½ மணி நேரம் ஊறவைக்கவும்

ஒரு கடாயில் ஆயில்விட்டு அதில் பட்டை, ஏலம், கிராம்பு, போட்டு வாசனை வந்ததும்

 நீளவாக்கில் நறுக்கிய பல்லாரி தக்காளி, மிளகாய்தூள் பாதி கொத்தமல்லி[கீரை] போட்டு நன்றாக வதக்கவும்

மசியும்வரை வதக்கி அதனுடன் ஊறவைத்த சிக்கனை போட்டு கிளரிவிட்டு மூடி [அடுப்பை சிம்மில் வைத்து விடவும்]

மிக்சியில் தேங்காய் பொ,. கடலை முந்திரியை அரைத்து கொண்டு

சிக்கன் நன்றாக வெந்து சிவந்த நிறத்துக்கு வந்ததும் அரைத்த இந்தவிழுதையும் இடியப்பாமவையும் கொஞ்சம் தண்ணீர்விட்டு கரைத்துக்கொண்டு அதனுடன் சேர்த்துகிளரவும்
[அடுப்பை சிம்மில் வைத்தபடியே அத்தைனையும் செய்யவும்]
மீதி உள்ள கொத்தமல்லியைபோட்டு பரிமாரவும்.

இப்போது சூடான சுவையான சிக்கன் ஸ்பெஷல் ரெடி

இது வித்தியாசமான டேஸ்டில் இருக்கும்
ரசம் சாதத்துக்கும், புரோட்டா, சப்பாத்தி, நாண்,
இவைகளுக்கு ஏற்ற ரெஸிபி...

அன்புடன் மலிக்கா

Wednesday, October 21, 2009

கொடுவாமீன் பொறியல்


                                                           
தேவையானவைகள்

 கொடுவாமீன் பீஸ் 4                                                      
சோளமாவு 1 ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
முட்டை 1
லெமஜூஸ் கொஞ்சம்
கெச்சப் 1 ஸ்பூன்
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப
டெக்கரேஷனுக்கு பல்லாரி ப,மளகாய்


                              மீனை நன்றாக கழுவவும் ஒருபிளேட்டில்

                         சோளமாவு மிளகாய்தூள் லெமன் ஜூஸ் கெச்சப்
                       முட்டையின் வெள்ளைக்கரு உப்பு போட்டு நன்றாக கலக்கி



                                        அதில் மீனை 10 நிமிடம் ஊறவைக்கவும்


                         நான்ஸ்டிக்பேனில் ஆயில் 3 ஸ்பூன் விட்டு சூடானதும் அதில்


மீனைப்போடவும்



                                                வெந்ததும் திருப்பிபோட்டுவிட்டு


கொஞ்சநேரம்வைத்து எடுக்கவும்



                                 முட்டையின்மஞ்சள்கருவுடன்   சிறிது உப்பு                                                                                                                  மிளகுதூள்  போட்டுநன்றாக கலக்கி
                                                      

அதே நான்ஸ்டிக் பேனிலேயே  ஊற்றவும்



                                                            அதுரெடியானதும்



                               ஒரு பிளேட்டில் இந்தமுட்டையை வைத்து
                            அதன்மேல் இந்தமீன்களை வைத்து


வட்டமாக நறுக்கிய பல்லாரியை நீளவாக்கில் நறுக்கிய ப,மிளகாயை சுற்றிலும் வைத்து  அலங்கரித்துப்பறிமாரவும்
                                                 


இந்தமீன்[ஃபிரை] பொறியல்  நல்ல ருசியாக இருக்கும்

அன்புடன் மலிக்கா

Monday, October 19, 2009

ஜால்ரா கோழியப்பம்




தேவையான பொருட்கள்



மைதா 1/4
தேங்காய்ப்பால் 1 கப்[தேங்காய்பால்பெளடர்]
முட்டை 1
உப்பு
கீ [பசுநெய்]
புடிக்குவளைபோன்று சிறிய வால்லுள்ள கப் சுட்டெடுக்க


மிக்சியியில் மைதா உப்பு முட்டை [தண்ணீர் கொஞ்சமாக ] ஊற்றி அரைக்கவும் கட்டிகளில்லாமல்




ரோஸ்ட்டுக்கு உள்ள மாவுபதத்துக்கு [இதேபோல்


முடிந்தால்வடிக்கட்டிக்கொள்ளவும்

அதனை வால்கப்பில்ஊற்றவும்

தோசைக்கல்சூடானதும்

நான்ஸ்டிக் தோசைக்கல்லில் இதுபோன்று சுற்றிச்சுற்றி டிசைன்
போடவும்


அதன்மேல் பசுநெயை தடவியதுபோல் போடவும்

[ஊரில் இருந்தால்வெற்றிலையில் நெய்போட்டு தடவுவோம்

உடனே வெந்துவிடும் திருப்பிப்போடக்கூடாது


10 ,15 நிமிடத்தில் சூப்பரான ஜால்ரா

இதை மட்டன்,, சிக்கன் கறியுடனும் சாப்பிடலாம். மிகுந்த டேஸ்ட்டான

ரெசிபி. எத்தனை சாப்பிட்டாலும் பசியடங்காது..

அன்புடன் மலிக்கா

Saturday, October 17, 2009

பாலக் புலாவ்




தேவையானவை




1 கட்டு பாலக்[கீரை]
2 கப் பாஸ்மதி அரிசி
2 பல்லாரி பெரியது
2 பச்சை மிளகாய்
1தக்காளி
1 டீஸ்பூன் கரம் மசாலா
1 பிரிஞ்சி இலை
2 பட்டை ஏலக்கய்
இஞ்சிபூண்டு விழுது 1 டேபில்ஸ்பூன்
4 டேபில் ஸ்பூன் பசு நெய்  “கீ” சேர்க்காதவர்கள் ஆயில் உபயோகப்படுத்தலாம்,
உப்பு தேவைக்கேற்ப.


முதலில் கீரை பல்லாரி தக்காளி இவைகள் நறுக்கிக்கொள்ளவும் ப.மிளகாயை நீளவாக்கில் கட் செய்யவும்



ஓவன் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் ஆயில்விட்டு நருக்கிய பல்லரி தக்காளி ப.மிளகாய் இவைகலில் பாதியை போட்டு 1 நிமிடம் மூடாமல் ஓவனில்வைக்கவும்,

பின்பு ஓப்பன்செய்து கீரை உப்பு கரம்மசாலாசேர்த்து கிளரிவிடவும்

மறுபடியும் மூடி 2 நிமிடம் வைக்கவும்


ரைஸ்குக்கரில் 3. ஸ்பூன் கீயைபோட்டு சூடானதும் பட்டை ஏலம் பிரிஞ்சி இலைபோடவும். அதுவாசனை வந்ததும்


மீதமுள்ள தக்காளி பல்லாரி ப.மிளகாய் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து வதக்கவும் பச்சைவாசம்போனதும்


கப்புக்கு 1 .12 என்ற அளவு தண்ணீர்சேர்க்கவும் மூடிவைத்து ஒருகொதிவந்ததும்அரிசியைப்போடவும்

[10 நிமிடம் குளிர்ந்தநீரில் ஊரவைத்து போட்டால் சாப்டாகவும் நீளமாகவும் வரும்]முக்கால் பதத்துக்கு வந்ததும்


கீரைக்கலவையை அதனுடன் சேர்த்து மெதுவாககிளறிவிடவும்

குக்கரை மூடி வார்மில் 5 நிமிடம் வைத்துவிடவும்
ஓவனில் சிரிய பெளவுல் வைத்து முந்திரியும் கொஞ்சம் பல்லாரியும் பொன்முருவலாக வருத்து புலாவின்மேல் அலங்கரிக்கவும்

இதற்கு சைட் டிஸ் மட்டன் குழப்பு சிக்ககன் கிரேவி, ஸோசேஜ் கிரேவி சூப்பரக இருக்கும்

கீரைகள் பிடிகாத குழந்தைகள்கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் ஹெல்த்துக்கும் நல்லது

அன்புடன் மலிக்கா







நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.