தேவையானவைகள்
அரிசி 2 கப்
கொத்துக்கறி 1/4 கிலோ
தக்காளி 1
[பெரிய வெங்காயம்]பல்லாரி 1
கேரட்1
மத்தங்காய் 1கப்
பாலக் [கீரை] 1/2 கட்டு
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
காளிப்ளவர் 1 கப்
ப்ளாக் ஐ, பயர் [காராமணீயாம்] 1 கப்
பச்சைமிளகாய் 2
உப்பு
ஆயில்
கொ,மல்லி
பட்டை ஏலக்காய்,கிராம்பு பிரிஞ்சிலை,
தாளிக்க கடு கருவேப்பில்லை
[பொடிக்க]
கடலைப்பருப்பு கொஞ்சம்
காய்ந்தமிளகாய் 2
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
வெந்தயம் 1/2 ஸ்பூன்
இவைகளை வெரும் வானலியில் வறுத்து நைசாக அல்லாமல் பொடித்துக்கொள்ளவும்]
அரிசியையும், பயரையும், நன்றாக அலசிவிட்டு 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
கீரை காய்களை நறிக்கிக்கொள்ளவும், கொத்துக்கறியை தண்ணீர்விட்டிஅலசி வடிகட்டியில் வடிக்கத்துக்கொள்ளவும்
ஒரு அகலமான சட்டியை அடுப்பில்வைத்து அது காய்ந்ததும் தேவையான அளவு ஆயிலூற்றி அதுசூடானதும் பட்டை பிரிஞ்சி இலை ஏழ்க்காய் கிராம்பு அனைத்தும்போட்டு வாசனைவந்ததும்
நறுக்கிய [வெங்காயம்]பல்லாரி தக்காளியை போடவும்
அது வதங்கியதும் மற்ற நறுக்கிவைத்துள்ளகாய்களை போடவும்அதுவும் வதங்கயதும் இஞ்சிபூண்டுவிழுதைபோட்டு கிளறிவிட்டு
அதன்மேல் ஊறவைத்த பயரையும் கொத்துக்கறியையும்போட்டு
தேவையான அளவு தண்ணீர்விட்டு
கொதித்து வந்ததும் ஊறவைத்திருக்கும் அரிசியைப்போடவும்
அது செட்டாகும்வரை தீயை மிதமாகவைத்து மூடிவைக்கவும்
பதத்துக்கு வந்ததும் திறந்து அதன்மேல் பொடித்துவைத்த பொடியை போட்டு நன்றாக கிளறிவிடவும்
அடிபிடித்துவிடாமல் கிளறிவிட்டு நன்றாக செட்டானதும் கருவேப்பில்லை கடுகுபோட்டு தாளித்து அதன்மேல் ஊற்றவும்
மீண்டுமொருமுறை கிளறிவிட்டு கொ,மல்லி பொடியாக நறிக்கி தூவவும்
இப்போது சூடான சுவையான நல்ல ஹெல்தியான உணவு தயார்,
இதற்கு உருலைக்கிழக்கை பொறித்து அதன்மேல் அலங்கறித்து பறிமாரவும்.
சைடிஸ் இல்லாமலே சாப்பிட சூப்பராக இருக்கும் வேண்டுமென்றால் தயி பச்சடி வைத்துக்கொள்ளலாம், இன்னும் கொஞ்சம் ரிச்சாக முட்டை வேகவைத்து பொறித்து சாப்பிடலாம்..
அன்புடன் மலிக்கா