அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, December 13, 2012

அட்டகாசத்தோடு நாங்களும்![பேச்சிலர் சமையல் போட்டி]




டும் டும் டும்,,இதனால் தெரிவிப்பது என்னெவென்றால். நானும் ஜலீலாக்கா நடத்தும் பேச்சிலர் சமையல் போட்டியில் பங்குகொள்கிறேன் என்பதை மிக மிக உரக்கசொல்லிக்கொள்கிறேன், அதென்ன உரக்க அப்படினெல்லாம் கேட்க்கப்புடாது ஓக்கே..

வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சிலர் வாழ்க்கை என்பது சற்று சிரமமானதுதான். ஏன் எதுக்கு சிரமம் அப்படிங்கிறீங்களா அட சமைக்கிறதுக்கு தானுங்க, அதை கொஞ்சம் சிரமமில்லாமல் செய்யசொல்லி சொல்லிகொடுத்தா பாவம் அந்த சிரமத்திலிலேர்ந்து விடுபடுவாங்களேங்கிறத  மனசுல வச்சிதான் இந்த போட்டிய நம்ம அக்கா தேர்ந்தெடுதுள்ளாங்களோன்னு நெனக்கிறேன்.

ஆக சமையல் அட்டகாசத்தோடு  சேர்ந்து நாங்களும் அந்த நல்லதில்  கொஞ்சூண்டு பங்கெடுக்கதான் இங்கே ரெண்டு மூன்று உடனடி சமையல் விபரத்தினை லிங்க் வழியா கொடுக்கிறேன்.

இவைகள் நான் ஏற்கனவே பதிந்திருந்தாலும் இது பேச்சிலர்களுக்கு உதவுமேன்னுதான். மீள்பதிவாக இங்கு மீண்டும் பதிகிறேன். [ஏன் கைவசம் சரக்கு இல்லையோன்னு நினைக்குக்கூடாது, இருக்கு ஆனா இல்லை. நேரமில்லை போட்டோவோடு அனைத்தும் இணைக்க. அதேன் இந்த மீள்பதிவு..

குபுஸிற்கு மேக்கப் [குபுஸ் ஃபிரை]

கருவாட்டுத் தொக்கு

ஈசி முர்தபா [லாப்பா]

நொடியில் பிரட் பஜ்ஜி


பின்னாத குறிப்பு.
-----------------------------
சமையல்கள் செய்து பார்த்து சாப்பிட்டுவிட்டு நல்லாயிருந்தா மட்டும் கருத்துச்சொல்லுங்க.நல்லயில்லன்னாலும் சொல்லுங்க. ஆனா அப்படியிப்படி ஆச்சின்னா அதுக்கு கலைச்சாரல் நிர்வாகமோ அதன் நிறுவனர் மலிக்காவோ பொருப்பல்ல பொருப்பல்ல, எக்கோ எஃபக்டோடு சொல்லிக்கிறேன்,,..[அதுசரி அதென்ன நிறுவனர் ஓ பில்டப்பு ஓக்கே ஓக்கே

அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.