பெரிய உருளைகிழங்கு 2
வெங்காயம் 1 பச்சைமிளகாய் 2
முட்டை 2
சோளமாவும் ரவாவும் தேவையான அளவு
உப்பு
சீரகப்பொடி 1.ஸ்பூன்
மிளகாய்தூள் 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
ஆயில் பொரிதெடுக்க
உருளைக்கிழங்கை முக்கால் வேக்காடக வேகவைத்து அதை சற்று பிசைந்து பொடியாக நறுக்கிய
வெங்காயம். பச்சைமிளகாய். கொத்தமல்லி இலை. மிளகாய்பொடி சீரகசோம்புப்பொடி உப்பு ஆகியவைகளைசேர்த்து பிசைந்து கொண்டு இதுபோல் உருண்டை பிடிக்கவும்.
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதில்
இந்த உருண்டையை முக்கியெடுத்து-பின்பு
சோளமாவு மற்றும் ரவாவாவையும் கலந்துகொண்டு அதில் பிரட்டி.ஆயில் சூடானதும் மிதமாக தீயை வைத்து, மெதுவாக ஆயிலில்போட்டு உடைத்துவிடாமல் பக்குவமாக திருப்பிபோட்டு
பொன்முறுவலாக சிவந்ததும் எடுக்கவும்
இப்போது சூடான சுவையான கட்லெட் நொடியில் ரெடியாகிவிடும். அப்படியேவும் சாப்பிடலாம். சாஸ், மற்றும் மயோனஸ், அல்லது பூண்டு சட்னியுடனும், தொட்டு சாப்பிடலாம்..
அன்புடன் மலிக்கா..