அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, March 5, 2011

உருளை கட்லெட்..

பெரிய உருளைகிழங்கு 2
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
முட்டை 2
சோளமாவும் ரவாவும் தேவையான அளவு
உப்பு
சீரகப்பொடி 1.ஸ்பூன்
மிளகாய்தூள் 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
ஆயில் பொரிதெடுக்க
உருளைக்கிழங்கை முக்கால் வேக்காடக வேகவைத்து அதை சற்று பிசைந்து பொடியாக நறுக்கிய
வெங்காயம். பச்சைமிளகாய். கொத்தமல்லி இலை. மிளகாய்பொடி சீரகசோம்புப்பொடி உப்பு ஆகியவைகளைசேர்த்து பிசைந்து கொண்டு
இதுபோல் உருண்டை பிடிக்கவும்.
முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு அதில்
இந்த உருண்டையை முக்கியெடுத்து-பின்பு 
                                                       சோளமாவு மற்றும் ரவாவாவையும் கலந்துகொண்டு அதில் பிரட்டி.
ஆயில் சூடானதும் மிதமாக தீயை வைத்து, மெதுவாக ஆயிலில்போட்டு உடைத்துவிடாமல் பக்குவமாக திருப்பிபோட்டு
பொன்முறுவலாக சிவந்ததும் எடுக்கவும்
இப்போது சூடான சுவையான கட்லெட் நொடியில் ரெடியாகிவிடும். அப்படியேவும் சாப்பிடலாம். சாஸ், மற்றும் மயோனஸ், அல்லது பூண்டு சட்னியுடனும், தொட்டு சாப்பிடலாம்..
அன்புடன் மலிக்கா..


நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.