அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, December 27, 2010

சிக்கன் காளிஃப்ளவர் மசாலாக்கறி!


சிக்கன் 1/2 கிலோ
காளிஃப்ளவர் 1 கப்
இஞ்சிபூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பட்டை லவங்கம்
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 3.4.
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
ஆயில்
உப்பு


மசாலாக்கு தேவையாவை
கடலைப்பருப்பு 3 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் 6
மிளகு 2 ஸ்பூன்
பட்டை சிறிதளவு
சீரகம் சோம்பு 2 ஸ்பூன்
தேங்காய் துருவியது 1 கப்.

சிக்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து திட்டமான பீஸாக்கிக்கொள்ளவும்.
உப்பும், மிளகாய்தூளும் இட்டு சிக்கனை 10 நிமிடம் பிரட்டிவைக்கவும். தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அறிந்துகொள்ளவும். .


மசாலாக்களுக்கு தேவையானவைகளை சட்டியில் 1ஸ்பூன் ஆயில் விட்டு சூடானும். அதில் இவைகளைபோட்டு வறுக்கவும். கடைசியாக தேங்காப்பூவையும்போட்டு வறுத்து சற்று ஆரவிட்டு அதை மிக்ஸியில் அரைக்கவும் சற்று கொரகொரப்பாக.

சட்டியில் ஆயில் விட்டு அதுசூடானதும், பட்டைலவங்கம்போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். அனைத்தையும்போட்டு பின்பு .

 காளிஃபிளவரை சேர்த்து லேசாக கிளறிவிடவும்.அது வதங்கியதும்.

பின்பு அதோடு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.அதுவும் சற்று மசங்கியதும்.


 அரைத்த மசாலாவையும் சேர்க்கவும்.
அது எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு மிதமான தீயில்வைத்து வைத்துமூடவும்.மசாலாவாசம்போய் நல்லவாசம் வந்ததும் திறந்து நறுக்கிய கொத்தமல்லியைபோட்டு இறக்கவும்.

இது சப்பாத்தி பரோட்டா இடியாப்பம்.குபூஸ்கூட சாப்பிட மிகுந்த சுவையாகயிருக்கும் சாதம்கூடவும் சாப்பிடல்லாம்.
இதில் காளிஃபிளவர் சேர்த்திருப்பதால் வித்தியாச சுவையாக இருக்கும்..
செய்து சாப்பிட்டுவிட்டு கருத்தினை பகிருங்கள்.
நில்லுங்கள்  இப்போது எப்படியிருக்குன்னு சொல்லிட்டுபோங்களேன்..
பார்த்தீங்கள் இந்த கறியை சாப்பிட ஒட்டத்திலேயே ஏறிவந்துட்டாங்கன்னா பாத்துக்கோங்க வாசமும் மணம் இழுத்துகொண்டுவந்துவிட்டது.[எப்படியெல்லாம் பில்டப் போடவேண்டியிருக்கு ஆத்தாடி].

Tuesday, December 7, 2010

எங்கே செல்லும் இந்த பாதை! [ஒரு பகீர்]


காலையிலேயே இப்படி ஒன்ன நான் பார்க்கனுமா.[யாரது அங்கே அப்ப மதியம் பாக்கலாமான்னு]. அட சொல்லவிடுங்கப்பு.. சரி நேசனல்டே லீவில் யு ஏ இ .சுற்றியதை போட்டோவோடு அரங்கேற்றி. சிலபலருக்கு காதில் மற்றும் வயிற்றில் புகையை ஏற்படுதலாமேன்னுதான் அட பொசுபொசுன்னு பொங்குமே செல்லப்பொறாமை அதை பார்க்கலாமேன்னு. பிளாக் பக்கம் வந்தேன். நம்ம அந்நியன் 2. அழைதிருந்தாரேன்னு அவர்வலைப்பக்கம் எட்டிபார்க்கபோனேன். போனேனா அச்சோ அப்படின்னு தலையில் கைவைத்து உக்காந்துட்டேன். வச்ச கண்ணு வாங்கமா பதட்டதோட பார்த்தேன். இது நம்ம நாட்டிலா? ஒருதரம் கண்ணைகசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன் லேசாமனசு உள்ளுக்குள் ஆட்டம்கண்டதுபோல தோணிச்சி. ஏன்னா நாம தமிழச்சி ல்ல, அதான். சரி என்னத்த பார்த்தா அதச்சொல்லு இங்கே ஹாட்பிட் எகிறுதுங்கிறீங்களா!
சரி சரி இதோ அட அத நீங்களும் பாருங்கப்பு.

அந்நியன் 2

.ஏங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ. காலம் காலம் செய்த கோலம் யாரோ யாரோ உணர்வாரோ.

தப்புதப்பா பாடுறேனோ ஏதோ பாடிட்டேன் விடுங்கோ.

காலத்தின்மேல பழியப்போட்டுவிட்டு மனிதயினம் வெகுவாக தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறது. நாகரீத்தில் சிக்கி அலைக்கழிஞ்சி  சீரழிஞ்சிபோகுதேன்னு வருதப்பட்டா. இது அந்தகால தமிழ் கலாச்சாரமுன்னு சான்றிதழ் வேறு கொடுக்குறாங்கப்பு.என்ன செய்ய கண்ணிருக்கு பாக்க காதிருக்கு கேக்கன்னு பார்த்துட்டு இருக்கமுடியல அதான் உங்ககிட்ட சொல்லலாமேனு சொல்லுறேன்.

என்னத்தச் சொல்ல காலம் கலிகாலம் முத்திபோய் முத்திபோய்
கடைசியில் இருக்கும் கலச்சாரமும் சீரழிஞ்சிபோச்சி. மிச்ச சொச்சமிருக்கும் மானமும் காற்றில் கலந்திடும் சூழல உருவாயிடுச்சி.
[என்னது அதுவும் போச்சா அடியாத்தி] வெறுமன நிக்கிற ஊர்ல சட்டபோட்டா கேலிதான் பண்ணுவாகப்பு பாத்துயிருங்க.

நாகவநாகரீக வளர்ச்சியின் உச்சதிலிருக்கும் மனிதர்களுக்கு கீழே இருந்துகொண்டு கத்தினால் கேட்காது. ஒருவனுக்கு ஒருத்தி.
உடலும் மனமும் ஒருவருக்குதான் என்னும் தமிழ்கலாச்சாரம் மாறிபோச்சா[சோ] என்றே தோன்ற வைக்கிறது.
உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் மேலிட கட்டிப்பிடிப்பதும் பலயிடங்களில்முத்தமிடுவதும். கணவன் மனைவிக்கே சொந்தமான ஒன்றை,   அவர்களின் கண்முன்னே அடுத்தவர்கள் நடத்தும் கேலிக்கூத்து அதிரத்தான் வைக்கிறது.

காலம் மாறலாம். கோலம் மாறலாம்.எத்தனையோ வழிகளில் நாகரீகம் தோன்றலாம் ஆனால் மனிதனெனுக்கென்று வகுக்கப்பட்ட சில எல்லைகளை தாண்டுவது சரியல்ல. அது அவனைமட்டுமல்ல அவனைசார்ந்தோரையும். சுற்றியுள்ளோரையும் பாதிக்கும்.

.நம்மை படைக்கப்பட்டதின் நோக்கமறிந்து,இறைவன் காட்டிய நேர்மையான வழியில் நடந்து,  உணர்வுப்பூர்வமான உணர்களை மதிப்போர்களுக்கு மட்டுமே இதை சொல்கிறேன்.

இப்படிதான் வாழவேண்டுமென்று வரையரை வகுத்து
வாழ்வதுதான் வாழ்க்கை
எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல
வாழ்வதும் வீழ்வதும்.
சிறப்புறுவதும் சீரழிவதும்
அனைத்துமே! அனைத்துமே
உங்கள் கையில்,உங்கள் மனதில் உங்கள் எண்ணத்தில்.
உங்களிடமே!  உங்களிடம்தான்..

ஆதங்கத்தோடு.
அன்புடன் மலிக்கா

Monday, November 29, 2010

ஃபிரஞ்ச்ஃபிரை மிக்ஸ் சிக்கன்


தேவையானவை


வேகவைத்த சிக்கன் 2 கப்

ஃபிரஞ்ச்பிரை 1 கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
சிகப்பு காய்ந்தமிளகாய் 3 [லேசாய் பொடியாக்கியது]
இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
பட்டை, லவங்கம்,
கிராம்பு 3 ,பிரிஞ்சியிலை
கொத்தமல்லி
ஆயில்
உப்பு

ஃபிரஞ்ச்பிரையை ஃபிரிஜரிலிருந்து சற்று வெளியில் எடுத்துவைத்துகொள்ளவும்ம் அதன் ஜில் போனதும் சேர்க்கனும்
வேகவைத்த சிக்கனை சிறிய பீசாக உதிர்த்து, வெங்காயம் தக்காளி
நீளவாக்கில் அரிந்துகொண்டு 

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் 2 ஸ்பூன் ஆயில்விட்டு அது சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு

பிரிஞ்சியிலை.அனைத்தையும்போட்டு,பின் நறுக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு சற்று சிவந்ததும் இஞ்சிபூண்டு பேஸ்ட்மற்றும் சிகப்பு காய்ந்தமிளகாய் சேர்த்து கிளறவும் நல்லமணம் வரும் ,
அப்போது சிக்கன் மற்றும் ஃபிரஞ்ச்ஃபிரை சேர்த்து அதன்மேல் உப்புபோட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்
பின்பு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி கிளறிவிட்டு இறக்கவும்.
இப்போது ஃபிரஞ்ச்ஃபிரை மிக்ஸ் சிக்கன் ரெடி.

ருஸ்தி//என்ன பக்கத்திலிருக்கும் பையனைப் பார்த்து பயந்துட்டீங்களா வேறொன்னுமில்லை இதை சாப்பிட்டுவிட்டுதான் பறந்து பறந்து விளையாடுறேன், அடிக்கிறேன். மிதிக்கிறேன். அப்படின்னும் . அடுத்தவங்க தாக்கினா அவங்க கைகாலுதான் உடையுமுன்னு கையவேற தூக்கி காட்டுறான்போல இதை செய்து சாப்பிட்டு நல்ல தெம்பாயிருங்கன்னுமுன்னு அவன் சொல்லுறான் நல்ல காதுகொடுது கேளுங்கப்பு..

அன்புடன் மலிக்கா

Saturday, November 27, 2010

இப்படியும்கூட ”கடி” நோய்கள்

திருடர்களுக்கு ”கொள்ளை"நோய்

வழக்கறிங்ஞர்களுக்கு ”வாத" நோய்

விவசாயிகளுக்கு ”மேக"ப் படை


பெண்களுக்கு ”பொன்"னுக்குவீங்கி

வழுக்கைத்தலையர்களுக்கு ”விக்"கல்

எறும்புகளுக்கு ”சக்கரை"நோய்


பால்காரர்களுக்கு "கோமா"

பாம்புகளுக்கு ”புற்று"நோய்

போர்வீரர்களுக்கு "படை"

சாராய வியாபாரிகளுக்கு கா"மாலை" நோய்

இப்படியெல்லாம் யோசிப்போர்களுக்கு. யோசிபீசியா அட்டாக்
[ஹி ஹி ஹி இது மட்டும் நம்மோடது]

கிஸ்கி//இருக்கிற வியாதியை எப்படியெல்லாம் பில்டப் பண்ணுராங்கப்பு. எங்கிருந்துதான் யோசிப்பாங்களோ. [மல்லி உனக்கு மூளையில்லாட்டி அடுத்தவாளுக்கும் இல்லையின்ன அர்த்தமா!]
அவாளெல்லாம் இப்படியோசிக்கிறதாலதானே இப்படியெல்லாம் மேட்டர்கிடைக்கிது.
யோசிபோர் சங்கமே நல்லாயோசிங்க யோசிங்க அப்படியே கொஞ்சம் நல்லதா யோசிச்சி நாட்டையும் முன்னேத்துங்க

என்னாடா எழுதுறதுன்னு யோசிச்சப்ப, எப்பவோ எங்கயோ படிச்சது யாரோ யோசிச்சது இப்ப நியாபகம் வந்துடுதுத்து எழுதிவிட்டேன்..
அன்புடன் மலிக்கா

Saturday, November 20, 2010

ஈஸி முர்தபா [லாப்பை]



தேவையானவை

ரெடிமேட் பரோட்டா 5

முட்டை 1
மட்டன் கொத்துக்கறி 1கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
கரம் மசலா 1 ஸ்பூன்
உப்பு
ஆயில்


ரெடிமேட் பரோட்டாவை சற்று வளத்து அதன்மேல்  1ஸ்பூன் முட்டைக்கலவை எடுத்து சுற்றிலும் தடவிவிட்டு
அதற்குமேல் இந்த உள்ளடம் வைத்து இதுபோன்று
நான்குபுறமும் மடக்கி.

பரோட்டாக்கல் சூட்டானது 1/2 ஸ்பூன் ஆயில் விட்டு அதுவும் சூடானதும் இந்த மடித்த முர்தபாவை போட்டு

இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்

                                                                     ஈஸி முர்தபா ரெடி


இதை கோழி மற்றும் கறிக்குழம்போடும் சாப்பிடலாம். சும்மா சாப்பிடவே செமடேஸ்டாக இருக்கும்.
இதில் சோசேஜ் கீமா செய்தும் இதனுள் வைக்கலாம் நம்முடை டேஸ்டுக்கு தகுந்தார்போல் அந்த நேரத்தில் எது இருக்கோ அதைவைத்து ஒரு ஈஸி முர்தபா செய்துகொள்ளலாம்.
 நான்வெஜ் சாப்பிடாதவங்க இதில்  காய்கறி மிக்ஸ் செய்து அதில்வைத்து சேர்த்து சாப்பிடலாம்..

உடனடி முர்தபா செய்ய சுலபமான வழி..


அன்புடன் மலிக்கா

Wednesday, November 10, 2010

மரக்கட்டை மனிதர்களால் மானத்திற்கு ஆபத்து.


கீரிட வைத்தது நமது அலுவலகத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பு... ""சார்... என் மனைவிக்கு உடம்பு சரியில்லைன்னு அந்த பிரபல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போயிருந்தேன். செக்கப் பண்ற அறைக்கு கூட்டிட்டுப் போயி உடைகளை எல்லாம் கழட்டி டாக்டர் செக்கப் பண்ணியிருக்காங்க. பிறகு, இடுப்புல இன்ஜெக்ஷன் போடும்போது எதார்த்தமா பார்த்தவ அதிர்ச்சி யாயிருக்கா. அவ ஆடைகள் இல்லாம படுத்துருக்குற பெட்டுக்கு நேரா கேமரா இருந்திருக்கு. பார்த்துட்டு வந்தவ எங்கிட்ட சொல்லி அழுதுக்கிட்டிருக்கா சார். பெண்களை பரிசோதனை பண்ணி இன்ஜெக்ஷன் போடுற அறையில எதுக்கு சார் கேமரா? அதுவும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனையில். என் மனைவி மாதிரி எத்தனை பெண்களோட அந்தரங் கத்தை ரகசியமா படம்பிடிச்சு மிஸ்யூஸ் பண்றாங் கன்னு தெரியல. இந்த கொடூரக் குற்றத்தை நக்கீரன்தான் சார் அம்பலப்படுத்தி... அந்த வக்கிர மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வைக்க ணும்'' -என்றார் தழுதழுத்த குரலில் ஒருவர்.


அந்த நபர் குறிப்பிட்டது சென்னை ஆவடிக்குப் பக்கத்திலுள்ள பட்டாபிராம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் பிரபல கிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான். பிரசவத்துக்குப் பெயர் பெற்ற மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் இளம்பெண்களின் அந்தரங்கங்களை ரகசியமாக படம்பிடிக்கிறார்களா? என்கிற அதிர்ச்சியுடனும்... அந்த மருத்துவமனையின் புகழைக் கெடுக்க தவறான தகவலை கொடுத்திருப்பாரா? என்கிற சந்தேகத்துடனும் அந்த மருத்துவமனையை நோட்டமிடக் கிளம்பினோம். நமக்கு தகவல் வந்த 21-ந்தேதி மதியமே.

சி.டி.ஹெச். மெயின்ரோட்டிலிருந்து நாம் உள்ளே நுழையும்போதே மருத்துவமனை கேமரா கண் இமைக்காமல் முறைத்தபடி நம்மை கண்காணித்துக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் இன்னொரு கேமரா. மதிய நேரம் கூட்டம் எதுவும் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்களின் கண்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்க... வெளியில் வந்து காத்திருந்தோம்.

மணி... மாலை 6. இளம்பெண்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவர்களில் ஒருவரைப்போல் உள்ளே நுழைந்து ரிசப்ஷனில் நின்றோம். ரிசப்ஷனின் இடதுபுறத்தில் ஃபார்மஸிக்கு பக்கத்து அறையில்தான் கேமரா பொருத்தப் பட்டிருப்பதாக நமக்கு வந்த தகவல். டாக்டரை பார்த்துவிட்டு வரும் இளம் கர்ப்பிணி பெண்கள்... திருமணமாகாத இளம்பெண்கள்... அந்த அறைக்கு சென்று பரிசோதனை + சிகிச்சை பெற்றபடி வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ஒரு வயதான பாட்டி சிகிச்சைக்காக அந்த அறைக்குள் நுழைய... பட்டென்று அந்தப் பாட்டியின் பேரன்களைப் போல் உள்ளே நுழைந்து "பாட்டிக்கு எப்படிங்க இருக்கு?' என்று நர்ஸிடம் பேச்சு கொடுத்தபடியே அந்த அறையில் கண்களை சுழல விட்டோம்.

அடிவயிற்றில் ஆணி அடித்தது போல் இருந்தது. பாட்டி பெட்டில் படுத்திருக்க... அவரின் கால் வைத்திருப்பதற்கு நேராக மேலே சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டிருப்பது நம் கண்ணில் பட்டுவிட்டது. அதற்குள் ""சரிங்க... நீங்க வெளியில் போங்க சார்... பாட்டிக்கு இன்ஜெக்ஷன் போடப் போறோம்'' என்றபடி நர்ஸ் கதவை சாத்த அடப்பாவமே... எத்தனை எத்தனை இளம்பெண்கள் இந்த இடத்திலே ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்? இதையெல்லாம் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டு யார் யார் பார்க்கிறார்களோ... என்கிற பதைபதைப்புடனும் அந்த வீடியோ கேமரா பொருத்தப்பட்டிருப்பதை எப்படியாவது ஃபோட்டோ எடுக்க வேண்டுமே என்கிற படபடப்புடனும்... பாட்டியைப் பற்றி விசாரிப்பது போல் திரும்பவும் அந்த அறைக்கு உள்ளே நுழைய முயற்சிக்க... அதற்குள் அந்த பாட்டிக்கு சிகிச்சை முடிந்து ஒரிஜினல் பேரன்கள் பாட்டியை அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

இனி வேறு இளம்பெண் அந்த அறைக்குள் சிகிச்சை பெறும்போது நாம் கேமராவுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பாகிவிடும்... என்ன செய்வது? நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருக்கும் போதே... ஒரு சின்ன "கேப்' கிடைத்தது.

நர்ஸ் மருந்து எடுக்க... வேறு அறைக்குப் போக... பெண் நோயாளியும் அந்த அறையில் இல்லாத நேரம்... பட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து... கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராவையே "க்ளிக் க்ளிக்' என்று ஃப்ளாஷ் போட்டு க்ளிக்கினார் நமது புகைப்படக் கலைஞர்.
அடிவயிற்றில் ஜிலிருடன்... நாம் அந்த அறையிலிருந்து வெளியேற... நல்லவேளை ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண்களும், ஊழியர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில் சீரியலை சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வெளியேறிய நாம்... க்ரேஸ் மருத்துவ மனையின் எம்.டி.யும்... மகப்பேறு மருத்துவ நிபுணருமான டாக்டர் செல்லராணியை 044-26853808 என்ற மருத்துவமனை எண்ணில் தொடர்பு கொண்டோம் -சிகிச்சைக்கு கர்ப்பிணி மனைவியை அழைத்து வந்த கணவனைப் போல்.

""எதுவா இருந்தாலும் மேடம்கிட்ட நேர்ல வந்து பேசிக் கோங்க'' என்று மருத்துவமனை ஊழியர் சொல்ல... நாம் விடாப் பிடியாக கெஞ்சி டாக்டரை லைனில் பிடித்தோம்... நைஸாக.

""ஹலோ வணக்கம்... டாக்டர் செல்லராணி மேடம்ங்களா?''
""ம்...?''
""ஆஹ்... நேத்து என் மனைவியை ட்ரீட்மெண்ட் டுக்காக உங்கக்கிட்ட கூட்டிட்டு வந்தேன் மேடம்...''
""சரி...''

""அது... வந்து... இன்ஜெக்ஷன் போடுற ரூம்ல கேமரா இருக்கிறதை பார்த்துட்டு வந்து அழுறா மேடம்.''
""அப்படியெல்லாம் எதுவும் கேமரா வைக்கலையே?''

""கேமரா இருக்குங்களே மேடம்?''

""ப்ச்... கேமரா வைக்கலேங்குறேன்ல'' (டென்ஷனாகிறார்.)

""அதில்ல மேடம்... நானும் வந்து பார்த்தேன் மேடம்... கேமரா இருக்குறதை. எனக்கென்னன்னா... நீங்க டாக்டர், பார்க்கலாம். ஆனா... வேற யாராவது பார்ப்பாங்களேன் னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு''.

""இங்க பாருங்க... கேமரா கண்ட்ரோல் என் ரூம்லதான் இருக்கு. நான் மட்டும்தான் வாட்ச் பண்ணுவேன். வேற எங்கயும் டிஸ்ப்ளே பண்றதில்ல...''.

""ஓ... அப்படிங்களா? ட்ரீட்மெண்ட் ரூம்ல கேமரா வெச்சிருக்கீங்களே தப்பில்லையா மேடம்?''.

""இதுல என்ன தப்பு இருக்கு? இந்த ஹாஸ்பிட்டலில் 14 கேமரா இருக்கு. நீங்க சொல்ற அந்த அறையில் இருக்கிறது சின்ன கேமராதான். ஸ்டாஃப்கள் வேலை பார்க்குறதை கண்காணிக்கத்தான் கேமரா வெச்சிருக்கோம் என்றபடி போனை துண்டித்தார். நக்கீரன்தான் வந்து ஃபோட்டோ எடுத்திருக்கிறார்கள் என்று முன்பே தெரிந்திருந்தால் மருத்துவமனை நிர்வாகம் உஷாராகியிருக்கும். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்லராணி டேவிட்டின் "கேமரா பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான்' என்ற ஒப்புதல் வாக்குமூலமும் நக்கீரனுக்கு கிடைத்திருக்காதே? அதனால்தான் இந்த சைலண்ட் ஆபரேஷன்.

கிரேஷ் மருத்துவமனை ஊழியர் ஒருவரோ ""எல்லா ரூம்லேயும் சி.சி.டி.வி. கேமரா வெச்சிருக்குறதால... நர்ஸ், லேப் டெக்னீஷியன்கள்னு வேலை பார்க்குற பொம்பளப் பிள்ளைங்க ட்ரெஸ் மாத்துறது கூட இந்த கேமராவில் பதிவாகுது. பாவம்... அந்தப் பிள்ளைங்களுக்கு தெரியாது. இவங்களோட இன்னொரு கிரேஸ் ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறதால... டாக்டர் செல்லராணி அங்கே போய்டுவாங்க. அந்த நேரத்துல அவருடைய கணவர் டேவிட்தான் கேமரா மானிட்டரில் உட்கார்ந்திருப்பாரு. அவர் டாக்டருமில்ல... ஆனா... இப்படி எல்லா ரூம்லயும் என்ன நடக்குதுன்னு பார்ப்பாரு. கேமராவில் பதிவானதைக் காண்பித்து ப்ளாக் மெயில் பண்ணியே சில சீனியர் டாக்டர்கள் அந்தப் பெண்களை தங்கள் வலையில் வீழ்த்தியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் மட்டுமில்ல... திருமணமாகாத இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து அந்த அறையில்தான் சிகிச்சை எடுத்துக்குறாங்க'' என்று வேதனையுடன் சொன்னவர் ""ஏற்கனவே நோயாளியின் கிட்னியை திருடியதா பெரும் பரபரப்பானாங்க இந்த டாக்டர். அப்புறம் இளம்பெண்ணுக்கு ஆபரேஷன் பண்றேன்னு பாதி ஆபரேஷன் பண்ணிட்டு மீதியை வேற ஹாஸ் பிட்டலுக்குப் போயி பண்ணிக்கோங்கன்னு திடீர்னு கைவிரிக்க... அந்த இளம்பெண் இறந்துட்டாங்க.... இவ்வளவு நடந்தும் இந்த மருத்துவமனைக்கு பெண்கள் கூட்டம் குவியும். அதை இப்படி வக்கிரமா வீடியோ பதிவு செஞ்சு கணவனை ரசிக்க வைக்கிறாங்களே ச்சே'' என்கிறார் நொந்தபடி.

""கூச்சம், பயம் காரணமாக ஒரு நோயாளி தனது உடலை காண்பிக்க மறுத்துவிட்டால்... வற்புறுத்தி டாக்டர் பரிசோதனை செய்வதே சட்டப்படி குற்றம். அப்படியிருக்க... அதே அந்தரங்கத்தை நோயாளிகளுக்கு தெரியாமலேயே இரகசியமாக படம்பிடித்து டாக்டரோ அல்லது வேறு யாரோ ரசிப்பது... மிஸ் யூஸ் பண்ணுவது பெரும் குற்றம்'' என்கிறார்கள் பிரபல மருத்துவர்கள்.

கிரேஸ் என்றால் மகிமை என்று அர்த்தம். இப்படிப்பட்ட வக்கிர கேமராவால் மகிமை இழந்து நிற்கிறது கிரேஸ் மருத்துவமனை. காவல்துறைதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த செய்தி எனக்கு மெயில் வந்தது
படித்ததும் அதிர்ந்துபோனேன் தேகம் முழுவதும் ஏதோ
ஊர்ந்து செல்வது போலிருந்தது..அச்சோ இது உண்மையாக இருக்ககூடாதுன்னு நினைத்தேன். ஏனெனில் இது எவ்வளவு பெரியகாரியம் தாய்மையடைந்து அதை தக்கவைக்க போராடி உயிரைக்கொடுத்து உயிரை வெளியாக்கும் இடமாச்சேன்னு..

பெண்ணுக்கு பெண்ணே எதிரியாவதா?மகப்பேறு மருத்துவர்கள் தாயைப் போலவல்லவா?தன் தாயிடம் ஒளிமறைவில்லாமல் இருக்கும் குழந்தையைபோல்.தன்னை நம்பிவரும் குழந்தையின் மானத்தை சீரழிப்பதா ? உயிரை காக்கவேண்டியவர்களே அவ்வுயிர் பலியாவதற்கும் .அவ்வுயிரின் மானம் குலைவதற்கும் உடந்தையாக மாறுகிறார்களே இதை நினைதால்தான் உள்ளமே நடுங்குகிறது.
எதை நம்பி நாம் மருத்துவமனைகளுக்கு செல்வது நம்பிக்கையில்தானே அதிலேயும் மண்விழுந்தால் எப்படி?.

பணம் என்றால் பிணமும் எழும் என்பார்கள் ஆனால் இவர்களைபோன்றவர்கள் பணத்துக்காக பிறர் மானத்தை போக்கி அதில் குளிர்காய்ந்து பிணமாக நடமாடுகிறார்கள்.

கவனம் இனி நம்மில்தான் இருக்கிறது எங்கு நோக்கினும் நம்மை நோக்கித்தாக்கும் எதிர்கனைகளை முறியடிக்க கவனம் நம்மில்தான் இருக்கிறது.எத்தனை பட்டாலும் திருந்தாத மனிதர்களைபோல்
எத்தனை கற்றாலும் மனிதமிழந்த ஜென்மங்களாக இருப்போரிடம் அதிஜாக்கிரைதையாக இருக்கவேண்டும்.

காலம் கலிகாலம் ஆகிபோச்சுங்கோ
கேமராக்கள் காலமாக மாறிப்போச்சுங்கோ

கண்ட கண்ட இடத்தில் கேமிராக்கள் பொருந்தப்படுகிறது கண்கானிகிறேன் என்ற பெயரில்.அது பலரில் மானத்தை காற்றில் பறக்கவைக்கிறது என்று தெரிந்தும். நல்லவைகளுக்காக பயன்படுத கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தையும் தீவைகளுக்காகவே கையாளப்படுவதுதான் வேதனையும் வேதனை.எல்லாம் கம்பியூட்டர் காலத்தின் சோதனை.

தொண்டை கிழிய கத்தினாலும் கைவலிக்க எழுதினாலும் திருந்தமாட்டேன் என்ற மனித மரக்கட்டைகளை என்ன செய்வது.
கண்ணுக்குத்தெரியா தீங்கிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள அவசியம் வேண்டும் வேண்டும்
”விழி ப்புணவு வேண்டும்.

பல தளங்களிலும் இது வெளியாகியுள்ளது

அன்புடன் மலிக்கா

Saturday, November 6, 2010

பாதாம் இறால் சாதம்..



தேவையானவைகள்.

இறால் 1/2 கிலோ
புழுங்கல் அரிசி 2 கப்
தேங்காய் துருவியது 2 கப்
பாதம்பருப்பு 20 ,25
பசுநெய் 2 ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் காரத்திற்கேற்ப
மஞ்சள்தூள் 1 ஸ்பூன்
சீரக சோம்புத்தூள் 2.ஸ்பூன்
கருவேப்பில்லை
கொத்தமல்லி
உப்பு
ஆயில் தேவைக்கேற்ப


அரிசியை கழுவி 1/2 மணிநேரம் ஊரவைத்துக்கொண்டு
இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும்.தேங்காய்ப்பூவையும் பாதமையும் ஒருசேர நன்றாக அரைத்துக்கொள்ளவும் மிகவும் நைசாக.
1 கப் அரிசிக்கு 2 கப்தண்ணீர் என எடுத்து அதில் அரைத்துவைத்துள்ள தேங்காய் கலவை ஊற்றி
அதனுடம் மசாலாக்களை கலக்கிவிடவும் அதனுடன் உப்பும் போடவும்
ரைஸ்குக்கரில் அதன் பாத்திரத்தை சூடாகி ஆயில் விட்டு அது சூடானது. அதில் பட்டை நறுக்கிய வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாய், கருவேப்பில்லைப்போட்டு வதக்கி அதனுடன் இறாலையும் சேர்த்து சற்று வதக்கவும்
அதன் வாசம் வந்ததும் இந்த தேங்காய் கலவையை அதில் ஊற்றவும்
ற்று கொதிவந்ததும் அதனுடன் ஊறவைத்திருக்கும் அரிசியைபோடவும்
ஒரு கிளறு கிளறிவிட்டு

மூடி வைக்கவும்
10,  நிமிடத்தற்கு பிறகு திறந்து கிளறி அதன்மேல் பசுநெயை ஊற்றி ஒரு கிளறு கிளறவும்
பின்பு கொத்தமல்லியிலை தூவவும்.
இப்போது பாதம் இறால்  சாதம்ரெடி.

இதற்கு நாக்கடுகு [தொட்டுகறி] சம்பல். முட்டை அவித்து பொறியல். கருவாட்டுத்தொக்கு  என நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றதுபோல் சைடிஸ் செய்துகொண்டு ஒரு பிடி பிடிச்சிறலாம்.
நல்ல சுவையும் மணமுடன் கூடிய ஹெல்தியான சாதம் குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையேனும் செய்து தந்தால் நல்லது.

இந்த பீ பி .கொலஸ்டால். உள்ளவங்க மாதம் ஒருமுறை அனைத்திலும் சற்று கம்மியாக்கிவிட்டு சமைத்து செய்து சாப்பிடலாம்.

அன்புடன் மலிக்கா

Wednesday, November 3, 2010

தலை தீபாவளியா!


என்ன நாளைக்கு தீபாவளிக்கு இன்றைக்கே ரெடியாச்சா. இதென்ன கேள்வி நாங்க எப்பவோ ரெடி. அப்படியா. சரி என்ன புடவை . என்ன சுடி.
என்ன மெடி, என்ன பேண்ட், என்ன சட்டை. என்ன என்னகலர். .
என்ன என்ன பலகாரம் செய்திருக்கீங்க. எங்கெல்லாம் போக பிளான்.[பிளாஆஆஆஅன் பண்ணாம எதுவும் செய்யக்கூடாது ஓகே]அப்பாபடா.
ஒருவழியா கேட்டுமுடிச்சிட்டேன். டக்கு டக்குன்னு பதில்சொல்லுங்க பாப்போம்.

காலையில் எழுந்து எண்ணைதேய்த்து தலைமுழுகி. இறைவனைவேண்டி,
பட்டாடையணிந்து. பட்டாசுகொழுத்தி. பலகாரம்துண்ணு.
பந்தமெல்லாம் கண்டு, பாசம்பொங்க மகிழ்ந்து.
நட்பெல்லாம் கண்டு நேசத்தை பகிர்ந்து. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அடிச்சி கெளப்புவீகளோ ஆனந்த ஆர்ப்பாட்டம்.


[என்ன நல்லாயிருக்குதா எவ்ளோ கஷ்டப்பட்டு தேடிபுடிச்சி உங்களுக்கா வாங்கி தயார் செய்தேன் தெரியுமா..

என்ன தலை தீபாவளியான்னு கேட்டுபுட்டு ஒன்னும் சொல்லாம இருக்கீகன்னு கேட்குறீகளா. அது ஒன்னுமில்லை. தலை தீபாவளின்னு சொல்லி.பட்டுவேஸ்டி பட்டு சொக்கா. அச்சோ சட்டை.
மைனர் சையின் மாப்பிள்ளை மோதிரம். சீர் செனத்தி. ரொக்கப்பணம் இப்படி யார் யாரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கு இதோ இங்கே தரலாமுன்னுதான். [பாவங்கோ பொண்ணுவீட்டுகாங்கோ அவாளுக்கு எத்தனை சிரமமிருக்கும் அதான்]

என்னது இது நியாயமா அடுக்குமா அவாளுக்கு மட்டும்தானா எங்களுக்கெல்லாமில்லையா அப்படினெல்லாம் பின்னாலிருந்து சவுண்ட் வருவது நல்லாவே கேட்குது. இருங்கோ இருங்கோ. உங்களிக்கில்லாமலா.
அதுக்காக காஸ்ட்லியாவெல்லாம் கேட்ககூடாது கம்பேனிக்கு கட்டுப்படியாகாது ஓகே..[பாவம் பச்சபுள்ள கம்பேனி]

அப்புறம் எல்லாரும் நல்லபடியாக தீபாவளியை கொண்டாடுங்கோ அப்படியே பட்டாசு பக்கமும் கொஞ்சம் கவனமாக இருங்கோ. பசங்களை ஜாக்கரைதையா பாத்துக்கோங்க . அப்படியே பட்டாசு தொழிலில் பட்டமரமாகும் பச்சிளங்களையும் மனதில் கொள்ளுங்கோ. இருளில் இருக்கும் அவர்களுக்கும் ஒளிபோல் வாழ்கையமைய வேண்டுங்கள்.............................

இருங்கோ இருங்கோ அப்படியே பலகாரம் எதுநாச்சும் அனுப்புறத்துன்னு, மயிலு, மெயிலு.காக்கா. புறாக்கிட்டேயெல்லாம் கொடுதுடாமா நல்லபுள்ளையா கூரியரில் அனுப்புங்கோ.

டிஸ்கி// தலை தீபாவளி கொண்டாடடும் என் தோழி விஜயாவுக்கு ஒரு ஜே. அப்படியே வாழ்த்துகள் மணமக்களுக்கு..பல்லாண்டு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வாழ்த்துக்கள்..

தீபாவளி கொண்டாடும் அனைத்து நெஞ்சங்களுக்கும்
அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

அன்புடன் மலிக்கா

Saturday, October 30, 2010

நல்லெண்ணை சாதமும், மருத்துவமும்..


தேவையானவைகள்..


நல்லெண்ணை 2 குழிக்கரண்டி


சிறிய வெங்காயம் 150 கிராம்

முட்டை 1

மிளகுதூள் 1 ஸ்பூன்
உப்பு

சோறு 2.கப்.
நல்லெண்ணையை சூடுவந்ததும் வெங்காயத்தை வதக்கவும்

வதங்கியதும் முட்டையை ஊற்றி கிளறவும் எண்ணையின் சத சதப்பிலேயே

மிளகுத்தூளை போட்டு ஒருகிண்டி கிண்டி சோற்றைப்போட்டு எல்லாம் சேர்வதுபோல் கிளறிவிட்டு

இறக்கி இளம்சூட்டோடு பிடித்து பிடித்து சாப்பிட்டால் சூட்டினால் ஏற்படும்
தொண்டைவலி தலைச்சூடு திடீர் வயிற்றுவலி போகும் என என் அம்மாவின் அம்மா செய்து தரும் பலனும் கிடைத்திருக்கு.
இது சாப்பிடவும் ருசியாக இருக்கும்.
-------------------------------------------------------------------------------------------------------------

நல்லெண்ணையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன.
நல்லெண்ணையை தலை முதல் கால் வரை தேய்த்துக் குளிப்பதால் உடல் சூட்டைக் குறைக்கிறது.உடலில் படியும் அழுக்கையும், எண்ணெய் பசையையும் அகற்றி தோல் பகுதியை சுத்தமாக வைக்கவும் இது உதவும்.

மேலும் பூப்படையும். [வயதுக்குவரும்] பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதற்குக் கொடுக்கலாம்.

அவ்வாறு கொடுப்பதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படும். மேலும், கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணை செய்கிறது என்பது அக்காலம் தொட்டுவரும் சிறப்[பு]மாம்.

இதன் தனிச்சிறப்பு. உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான்  கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணை, ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையும் செய்கிறது.

டிஸ்கி//நல்லதுன்னு சொன்னா நல்லாக்கேட்டுகோனும் புரிஞ்சிதோன்னோ..

அன்புடன் மலிக்கா..

Wednesday, October 27, 2010

அடி மருதாணி.




டிஸ்கி//மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல்
போன்றவைகளுக்கு, இலை மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் இடலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில்
தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும். புண், நகப்புண்,  இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். . நகங்களில் தடவினால் நகம் சூப்பராக சிவக்கும்.[படித்தும், செய்ததும்தான்]

ஹலோ ஹலோ இருங்க இதகேட்டுட்டு போங்க
இதெல்லாம் பிரஷ்சாக இருக்கும் மருதாணியில் செய்யவேண்டும். இதேபோல் கோன் மருதாணியில் அல்ல. இதை வாங்கி இப்படியெல்லாம் செய்துவிட்டு டாக்டர்கிட்ட ஓடாதீங்க. அப்புறம் என்னையும் தேடிவந்து ரெண்டு சாத்து சாத்திடாதீங்க.

Sunday, October 24, 2010

அடடா”உப்பு” வில் இத்தனை உண்டா! [உப்பு வைத்தியம்]


சொட்டை[யாஆஆ..] மண்டையில் முடி முளைக்க:
உப்பை நன்றாக தூள் செய்து தினமும் 3 அல்லது 4 வேளை தேய்க்க முடி வளரும் மாம்.

[அதற்காக போட்டு எந்நேரமும் அழுதி தேய்த்து ரதம் வர வைத்துவிடாதீர்கள்.அதானுங்க ரத்தம் ஹா ஹா அப்பால உள்ளதும்போச்சுடுடா நொல்லக் கண்ணான்னு ஆகிடும்]

நகச்சுத்தியா!:
உப்பு, வெங்காயம்.சுடுசோறு. இம்மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நகச் சுற்றில் கட்டிக்கொண்டால் குணமாகும்.

[சம அளவு எடுக்கும்போது சூடா சுல்லுன்னு இருக்கேன்னு ஒருவாய் சாப்பிடதோன்றும் தப்பில்லை அதை செய்துகோங்க]


முள் குத்திடுச்சா [வலி நீங்க:]
உப்பு, மிளகு, சரியளவு எடுத்து நல்லெண்ணையில் வத்தக்கிக்கொண்டு அதன் மேல் ஒத்தடம் தந்தால் இதம் தெரியும்.

[அதுக்காக சுட சுட வைதுடாதீங்கப்பூ அப்புறம் கால் கொப்புளிச்சிடும்]

காதில் எறும்பு அல்லது சிறு பூச்சி புகுந்து [விட்டால்]
 கொய்யின்னு சவுண்டு வருமே:

கொஞ்சம் உப்பை நீரில் கலந்து கரைத்து அதை மெதுவாக காதில் விடவேண்டும் சில நிமிடத்தில் எந்த பூச்சியும் வெளியேறிவிடும்.

[அதுக்காக பாம்புபுற்றில் போய் ஊற்றிப் பார்த்துறாதீங்கப்பு அப்பாலா அச்சோஓஓஓ]

விஷக்கடிக்களா!:
குளவி, சிலந்தி போன்ற விஷப்பூச்சிகள் கொட்டினால், கடித்தால், உப்பைகொஞ்சம் தண்ணீபோட்டு கெட்டியாகக் கரைத்தி கடிவாயில் தடவினால் குணங்கொடுக்கும்.
சக்கரைத் தண்ணீரில் சில துளி உப்புத்தண்ணீர் விட்டு உள்ளுக்குள் கொடுப்பதும் நல்லது.

[அதுக்காக உப்புதண்ணீரை கடகடண்ணு குடிச்சிறாதீங்க அப்புறம் உப்புநீர் வந்துடும் அதுக்கு நான் பொறுப்பல்லப்பா]

டிஸ்கி// இவைகளெல்லாம் மல்லி கண்டதும். படித்ததும்தான். பலமான சந்தேகமெல்லாம் கேக்கப்புடாது அப்புறம் நான் அழுதுடுவேன் இன்னும் உப்பைபற்றிய குறிப்புகள் இருக்கு அதெல்லாம் அடுத்தமுறை. இப்பயில்ல ஏன்னா விரல் வலிக்குது ரொம்ப நேரம் கீப்போர்டை தட்டுவது. இருங்க உப்புபோட்டு விரல்கழுவிட்டு அப்புறமா வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்


அன்புடன் உப்பு. அச்சோ

அன்புடன் மலிக்கா

Tuesday, October 19, 2010

நாக்கடுகு. நார்தங்காய் தொட்டுக்கறி[சம்பல்]


தேங்காய் துருவியது 1 கப்

நாக்கடுகு

[இதை இங்கிலீஸில் எப்படி சொல்வாங்கன்னு தெரியலை ஹா ஹா]

கருவேப்பில்லை

நார்தங்காய் ஊறுகாய்

சிகப்பு மிளகாய் காரத்திற்கேற்ப

சின்ன வெங்காயம்

உப்பு

நாக்கடுவையும் சிகப்புமிளகாவையும். வெறும் சட்டியை சூடாக்கி அதில்  வறுக்கவும் மணம் வரும் அப்போது தேங்காயுடன் மற்றபொருளையும் சேர்த்து ஒன்றாக மிக்சியில் அரைத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
அவ்வளவுதான் மிக ஈசியான சம்பல்.அதேசமயம் ரசம் சாதம் இறால்சாதம். தேங்காய் சாதம் இவைகளுக்கு நல்ல காம்பினேஷன். சும்ம படு சோக்க இருக்கும். சுட சுட சோறுவைத்து அதில் இதைசேர்த்து பிசைந்து சாப்பிட்டால் எப்படியிருக்கும் தெரியுமா. அதெல்லாம் சொன்னாத்தெரியாது. சாப்பிட்டு பாருங்க..

இதுதானுங்க நாக்கடுகு

போட்டுட்டோமுல்ல ஸாதிக்காக்கா அது இதுதான் பெயர் தெரியாததல்ல இதை நாக்கடு[வு]கு என எங்கபக்கம் சொல்லுவாங்க அதான் அதன் பெயர்
அதுக்குமேல தெரியாதுங்கோ வேணுமுன்ன கிஸ்ட்ரி எடுத்து பார்க்கலாம் எனக்குதான் தெரியாதே ஹி ஹி ஹி
அன்புடன் மலிக்கா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.