பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிமுகவிழா.[அமீரகக்கிளை] கடந்த 7-5 2010 வெள்ளியன்று மாலை 6 மணிக்கு, துபை பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில்.மிக சிறப்பாக நடைப்பெற்றது. சிறுமி, வஃபா. அல்ஹம்து சூராவை அழகாய் விளக்கத்துடன் ஓதி துவங்கி வைக்க
சிறப்பு விருந்தினர்களாக,
கொழும்பு தமிழ்சங்க துணைத்தலைவர்.காவியத்திலகம் டாக்டர். திரு ஜின்னாஹ் ஷரீபுதீன். அவர்களும். எளிய மார்க்கத்தை இனிய இதயத்தில் ஏற்றுக்கொண்ட[பேராசிரியர் பெரியார்தாசன் என்னும்]
பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களும்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார்குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்.
செய்யது எம். சலாஹுதீன் அவர்களும். மற்றும் சிறப்புமிக்க பெரியவர்களும் வந்திருந்துவிழாவை சிறப்பித்தார்கள்.
விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. பேராசிரியரின் அற்புதமான உரை அனைவரையும் ஈர்த்து அன்போடு கட்டிப்போட்டது என்றால் அதுமிகையாது. தெளிவான தெள்ளத்தெளிவான இஸ்லாத்தைப்பற்றியும் மனோதத்துவத்தைப்பற்றிய பேச்சும் அதற்கான விளக்கமும். மிக மிக அருமை. அங்கிருந்து கேட்டோர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியது. சுபகானல்லாஹ்.
அல்லாஹ் யாரை தன்வசப்படுத்திக்கொள்ள நாடுகிறானோ அவனே நேர்வழிப்பெற்றவன். அவ்வழியில் நம்மையும் இணைத்துக்கொள்வானாக!
இது நான்தான்.
பாலைமணலைவிட படுபயங்கரமாக
ஜுரமென்றபெயரில் தேகமெங்கும் அனல்பறக்க.
கூடவே நானுமிருப்பேன் என்று இருமலும் சேர்ந்திருக்க.
அறிமுகக்கவிதையை வாசித்துவந்தமர்ந்தேன் மூச்சுவாங்க..
ஈடிஏ. செய்யது எம். சலாஹுதீன் அவர்கள்.
டாக்டர். திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்கள்
தலைவர்அப்துல் கதீம் அவர்கள். அப்துல்லாஹ் அவர்களுக்கு சால்வை அணிவித்தபோது
விழாவிற்க்கு வந்திருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி
என் அழைப்பையும் ஏற்று வந்திருந்த நல்லுள்ளங்களும் மகிழ்ச்சிகலந்த
நன்றி நன்றி நன்றி...
//
இதில் பிரசுரிக்கபட்டுள்ள போட்டோக்கள் அனைத்தும். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் [அமீரககிளை] ஆட்சிமன்றகுழுவின் தலைவர் திரு. அப்துல் கதீம் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகே இதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. [என் போட்டோவைத்தவிர]//
இதுதான் நான் வாசித்த கவிதை..
சிகரத்தை நோக்கி
பன்னாட்டுக் கழகமிது-நல்ல
பண்பாளர்கள் உருவாகியது
இஸ்லாமிய இயக்கமிது -நல்
ஈமானை வளர்குமிது
இலக்கிய கழகமிது -நல்
இலக்கியவாதிகளை உருவாக்குமிது
இலக்கிய பணிகளிலே- தன்னை
இணைத்துக்கொள்ளும் மனிதர்கட்கு
இயன்ற உதவிசெய்து உயர்த்துமிது
பெண்களுக்கும் ஊக்கம்தந்து- நற்
பண்புகளைக் காட்டுமிது
நல்லெண்ணெங்களை ஊக்குவிக்க
நற்பணிகள் செய்யுமிது
கட்சியில்லை கொடியுமில்லை
நன்மைசெய்ய துடிக்கிறது
களங்கமில்லா எண்ணங்களால்
கழகம் சிகரம்தொட போகிறது
பாலை பரப்பிலிருந்தும் -இஸ்லாமிய
இலக்கியம் பரப்பிடுவோம்
இயக்கம் பாரெங்கும் பரவிடவே –அயர்ச்சி
பாராது உழைத்திடுவோம்
இறைவனில் அருளாலே
இயக்கத்தை நடத்திடுவோம்
ஈமானில் உறுதியுடன்
இனியபாதையில் நடந்திடுவோம்..
அன்புடன் மலிக்கா