
பெற்ற பிள்ளைகளால்
பெற்றோருக்கு கிடைகும் சந்தோஷம்காசு பணத்திலல்ல, அவர்களின் வளர்ச்சியிலும்
அவர்கள் நன்னடத்தையிலும், அவர்களின் முன்னேற்றத்திலும்
அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியிலும்தான்,
ஒவ்வொரு பெற்றோரும் வேண்டுவதும் விரும்புவதும் அதுவே
என் மகன் இவன் என்பதை விட, இவனின் தாய் நான் என்பதில்
என்று ஒரு பெற்றோர்கள் நெகிழ்ந்து மகிழ்கிறார்களோஅன்றே அவர்களின் தீரா ஆவல்கள் நிறைவேறுகிறது
அவ்வகையில் தற்போது நான், படிப்பிலும் விளையாட்டிலும்
சிறப்பதுபோல் அவன் வாழ்விலும் செயலிலும் சிறந்துவிளங்கிட
சிரம்தாழ்த்தி இறைவனிடம் வேண்டுகிறேன்.
டேபில் டென்னிஸ்ஸில் முதலிடம்
புட்பாலில் முதலிடம்ஓட்டப் பந்தயத்தில் மூன்றாமிடம்
மற்றுமொரு ஃபுட்பாலில் ரன்னர்.
ஸ்டேட் அன் டிஸ்டிக் லெவலில்.
முதல் மற்றும் இரண்டாமிடம்
மேக்ஸ் அன் இங்லீஸ் தேர்வில் என
இம்முறை ஊர்வரும்போது
பதக்கமும் கப்பும் சர்ட்பிக்கெட்டும் வாங்கிவந்து மகிழ்வித்தான்
உடல்நலம் சற்று அடிக்கடி சறுக்கிறது நோஞ்சானாக இருக்கின்றான்,
சத்துள்ள உணவு சாப்பிட அடம்பிடித்தால் சவளைப்பிள்ளையாக இருக்கும் என்று யாரோ சொன்னது நியாபகம் வருது
இரண்டு வருடமாகியும் குற்றால சீசனும் அவனுடலுக்கு
இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை
குற்றாலம் சையத் ரெசிடண்டல்ஸில்
பத்தாம் வகுப்பில் படித்துகொண்டிருக்கும்
எனது மகனுக்கு தங்கள் அனைவரின்
பிராத்தனையென்னும் துஆக்கள் வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடு வாழவும்
வரும் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்லமதிபெண் எடுத்து அவனின் எதிர்கால எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேறவும்,
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்.
ரொம்ப போட்டு எல்லாவற்றையும் திணித்தால் அதனை ஏற்றுக்கொள்ளவே மறுக்கும், அது படிப்பானாலும் சரி, அவர்களால் முடியுமென்ற உற்சாகத்தை மட்டுமே நாம் ஊக்கமாக கொடுத்தால்போதும்
பல நேரம் முடிவது சில நேரம் முடியாமலும் போகலாம்
அதற்காக அவர்களை குற்றஞ்சொல்லி குத்திக்காட்டகூடாது ,குறிப்பாக அடுத்தப்பிள்ளைகளை எடுத்துக்காட்டி ஒப்பீடுக் காட்டகூடாது,அது அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது எனது கருத்து...