அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, March 7, 2013

கனவா [squid] கறி.


[கனவைக்கூட சமைப்போமுல்ல] இது அந்தகனவு இல்லீங்கோ,

கண்ணில் நீந்தும்
கனவையும் உணர்வாய் சமைப்போம் கவிதையாய்
கடலில் நீந்தும்
கனவாவையும் சமைப்போம் கனவாக் கறியாய்.

அச்சோ இங்கேயும் கவிதையா. ஓடாதீங்க நில்லுங்க.சமையலதான் இது சமையல்தான்..

கனவா! [squid] தேவையான அளவு[இது 1 கப்]
பட்டர் தேவையான அளவு,
தக்காளி 1
பல்லாரி வெங்காயம் 1
சோயா சாஸ் 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் 2 இலை
சீரகம் சோம்பு மிளகு சிகப்புமிளகாய்.3.பட்டை
இவைகளை லேசாக வறுத்து பொடித்த மசாலா 1/14 ஸ்பூன்
கொத்தமல்லியிலை
உப்பு
எண்ணை

கனவாவை சுத்தம் செய்துகொண்டு எடுத்துக்கொள்ளவும்
[சுத்தம் செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும் இல்லையெனில் அதிலிருக்கும் கருப்பு பித்து கலங்கிவிட்டால், மொத்த கனவாமீனும் கருப்பாகிவிடும்]
தக்காளி வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன் இவைகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

அடுப்பை பற்றி, அதில் ஒரு கடாய் வைத்து அது சூடானதும், அதில்  பட்டர்போட்டு உருகியதும் அதனுடன் கொஞ்சம் எண்ணைவிட்டு,அதில் சோம்பு போட்டு தாளித்து, அதனுடன், நறுக்கிவைத்துள்ள வெங்காயம்போட்டு, சிவக்க வதங்கியதும், தக்காளியைபோட்டு அதுவும் வதங்கியது,அதன்மேல்,இஞ்சி பூண்டு விழுது  வாசனை வந்ததும்,வறுத்து பொடித்த மசாலாவைபோட்டு கிளறும்போதே சோயா சாஸ் ஊற்றி கிளறினால் நன்றாக வாசம் வரும், அப்போது ,  ஸ்பிரிங் ஆனியன் போட்டு,அதன்மேல் கனவாவை போட்டு கிளறி மசாலாக்கள் கனவாவோடு சேர்ந்து பிரண்டு கமகமக்கும்போது, உப்பு போட்டு 1கப் தண்ணீர்விட்டு,  அடுப்பை மெதுவாக குறைத்துவைக்கவும்.

சற்று நேரம் கழித்து திறந்து கிளறிப்பார்த்து கறிபத்ததுக்கு வந்ததும் வெதுவிட்டதா என பார்த்துவிட்டு வேகவில்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து 2,3 நிமிடம் கிளறிவிட்டு பின்பு இறக்கவும். அதன்மேல் கொத்தமல்லியிலை தூவி கிளறி, சாப்பிடவும். இது மிகவும் ருசியான கறி, சப்பாத்தி, பரோட்டா, சோறுக்கூடவும்,சாப்பிடலாம்.

கனவகூட சமக்கிறாங்கப்பா, யாரோட மயிண்ட் வாய்ஸோ கேட்குது. ஹாஹா..

அன்புடன் மலிக்கா.

4 comments:

சேக்கனா M. நிஜாம் said...

என்ன ஆச்சரியம் ! எங்கள் வீட்டில் இன்றைய பகல் உணவில் கனவா கறியும் ஒன்று... சாப்பிட ருசியாக இருக்கும்.

தொகுப்பு அருமை !

தொடர வாழ்த்துகள்...

Vikis Kitchen said...

கணவா மீன் கறி பார்க்க ரொம்ப நல்ல இருக்கு. கவிதையும் சூப்பர்:)

பூ விழி said...

கனவ கூட கவிதையும் போட்டி போடுது

Starjan (ஸ்டார்ஜன்) said...

இது கனவா?! நினைவா?!

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.