அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, October 3, 2010

ஆடிய ஆட்டமென்ன! என்ன! என்ன!

பெருநாள் லீவில் ஒருநாளைக் கொண்டாட  அல்அயின் போயிருந்தோம் [இது 25 .30 வதாவது தடவையின்னு நினைக்கிறேன்] அங்குபோட்ட ஆட்டமிருக்கே அதோடு உடல்கண்ட ஆட்டமிருகே அப்பப்பா சொல்லில் வடிக்கமுடியாது.

5. குடும்பம் ஒன்றாக சேர்ந்து 4 காரில் அல் அயினுக்கு போனோம். .அங்குபோய் சேர்ந்தபோது பகல் 11 மணி.
அங்கிருக்கும் ஃபன்சிட்டிக்கு போகமுடிவுசெய்து [பகலென்ன. வெயிலென்ன. ஆட்டம்போட], டிக்கெட்  40 திர்கம்தான் ஒரு ஆளுக்கு எல்லாம் கேமிலும் எத்தனைமுறை வேண்டுமென்றாலும் ஏறி இறங்கலாம் என்றதால். டபுள் ஓக்கேன்னு புகுந்தாச்சி.

உள்ளே போனதும் கூட்டம் எக்கசக்கம் [லீவ்நாளாச்சே அப்படிதானிருக்கும் சும்மா பில்டப் விடாம மத்ததச்சொல்லு] சரின்னு எல்லா கேமுக்கும் போகிறமாதரி ஓர்யிடத்தில் கொண்டுபோயிருக்கும்  5, வீட்டு சாப்பாடுகளையும். நொறுக்குத் தீனிகளையும் வைத்துவிட்டு, யார்யார் எங்கெங்கேபோகனுமோ போங்கன்னாச்சி. குட்டிஸ்களெல்லாம் ஆளைவிட்டாபோதுமுன்னு ஒருசெட்டாக எஸ்கேப்.
3 ஆண்கள் மட்டும். நம்ம மச்சனையும் சேர்த்துதான். இந்த ஆட்டத்துக்கு நாங்கவரலைப்பா. எங்களுக்கு பேசவேண்டிய வேலையிருக்குன்னுசொல்லி அழகிய எஸ்கேப்.

சரி சரிபேசிக்கிடே நின்னா எல்லாத்துக்கும் கூட்டம்கூடிரும் வாங்க எதிலாவதுபோய் முதலில் இடம்பிடிப்போம் [ஏன்ன அப்புறம் வரலாற்றில் இடம்பிடிக்கனுமுல்ல] இது இதில்போய்ய் ஏறலாமுன்னு ஏகப்பட்ட டிஸ்கஸ் வேணவே வேணா இது அந்தரத்தில் 6. 7 .முறை தலைகீழா நிற்கிறது என என்மகள் பயமுறுத்தியும். அதெல்லாமில்லை என்னதான் ஆகுதுன்னு பார்ப்போம் என நானும் என் தோழியும். [மற்ற 3 பயந்தாங்கோழி ] பார்த்தாலே தலைசுத்துன்னு நின்னுட்டாங்க
சரி தலைசுற்றும்போது அப்படியே முதுகைபார்த்துக்கொண்டு நிற்கட்டும் வா என என் தோழியில் கைகளைப்பிடிது இழுத்துச்சென்றேன்.

ஆட்டத்துக்கு வரலை ஆனா ஆடுவதை பார்க்கவருகிறேன்சொல்லி மச்சான் வந்து எங்க ஹேண்ட் பேக்கெல்லாம் வாங்கிகொண்டு வெற்றிவாகை சூடிவா மச்சின்னு ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டாக. [இப்படி அசால்ட் ஆறுமுகம்போல் அனைத்திலும்  தைரியம் போக கற்றுக் கொடுத்ததே அவுகதானே]

இதோ இதில்தான் முதலில் ஏறினோம்
நானும் தோழியும் .ஒரு கேங்.  எங்களுக்கு முன் என் தோழியின் கணவர். நான் வரலையின்னு சொல்லி அங்கேயே நின்ன மற்றொரு தோழியின் கணவர் வேகமாகவந்து அவர் அருகில் அமர்ந்தார். மானம்போய்விடும் பெண்களே தைரியமாய் வந்துட்டாங்க அப்புறம் எனக்கு என்ன பயம் அதேன் வந்துட்டேன்னு.
அனைவரும் ஏறியதும் சன்னல் கதசை அடைப்பதுபோல் அனைவரியும்போட்டு பூட்டி சாவி எடுத்துட்டாக. ஏன்னா அந்தரத்தில் தலைகீழா நிற்கும்போது யாரும் விழுந்துடக்கூடாதுல்ல அதுக்குதான் விழுந்தாலும் அதுக்குல்லேயே கிடக்கட்டுமுன்னுதான்.

தலைகீழ் நிற்கும் ஸ்கைஃப் ஃப்ளையர் ஏறினோமா!ஆஆஆஆ
மெல்ல மெல்ல தாலட்டி அம்மாடிடியோஓஓஓஓ ந்னு அலறவச்சது என் தோழியை [பேஷ்மெண்ட் வீக்காயிருந்தாலும் நாம வெளியில் [காட்டிக்கமாட்டோமுல்ல] 

என்கூடயிருந்த தோழி பட்டபாடுயிருக்கே. அடியே ஏண்டி என்னை இதுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன்னு ஒரு ஒப்பாரி வைச்சாளே பார்க்கனும்.
சொன்னாளே சொன்னாளே
 என் புள்ள சொன்னாளே போகாதே போகாதேன்னு
அதில்போய் ஏறாதேன்னு இப்ப இங்க வந்து தலைகீழ தொங்கவிட்டுடியேடி படுபாவின்னு புலம்பியதும்.

தலைகீழ் நிற்கும்போது எனக்கு கால் ஆடிய ஆட்டமிருக்கே அப்படியே வெளியே வந்துவிடுவோமோ என்பதுபோல் உடம்புவழுக்கியது. அப்படியிருந்தும் எனக்கு சிரிப்புதாங்கலை.
அடியே அப்படியே கண்ணைத் திறந்துபாரேன் எப்படி தெரியுதுன்னு சொன்னதும் அடி பாதகி இப்படியாப்பட்டவளாடி நீ. நான் கண்ணைதிறந்தா செத்துடுவேன் என் குடலெல்லாம் வாய் வழியாவருதே என்னப்பெத்த உம்மாவே! நீ முன்னாடிபோய் சேந்துட்டா இவ இப்ப என்னை உங்கிட்ட அனுப்பப்போறாளே என அது சுத்தச் சுத்த என்னை திட்டி தீர்த்துவிட்டாள்.
முன்னாடியிருந்த ஜீவன்களின் நிலையோ அய்யஹோ கேட்கவே வெ வெ வேணாம். முக்கலும் முனங்கலும். இவ கத்த கத்த அங்கிருந்து சும்மாயிருடி இங்கேயே ஆட்டம்காணுது நீவேறன்னு.

என்னதான் நான் ஸ்டார்ங்கயிருந்தாலும் ம்ஹூம் உள்ளுக்குள் நாடிநரம்பெல்லாம் ஆட்டம்கண்டு. ஒருவழியா குடலெல்லாம் கலங்கி கண்களெல்லாம் சிவந்து. தலைசுற்றி [இதெல்லாம் நமக்கில்லை ஹி ஹி]
வந்து இறங்கியாச்சி.

வந்ததோட விழுந்தது முதுகில் ஒரு அடி யாருக்கு எனக்குதான். பாவி பாவி சுத்துதடி தலையன்னு அவசொல்ல. பக்கத்தில் வீட்டுக்காரவுக நின்னுகிட்டு மேலேபோனவகளையெல்லாம் கொண்டுபோய் காட்டிவிட்டு கூட்டியாந்துட்டாகளே! என்னமோ பண்ணுதேன்னு சொல்ல,
வராத பயந்தாகோழியெல்லாம்  அதுக்குதாம்ம்பாஅப்பவே சொன்னோம் நான் வர நான்வரலைன்னு ஜாலராபோட, என் மச்சான் மட்டும் வெரிகுட் கீப்பிட்டப் இந்தா தண்ணீர் குடி அடுத்த ஆட்டதுக்கு ரெடியாக்குன்னு சொல்ல. எல்லாம் நீங்க கொடுக்கும் தைரியம்தான் மலிக்காவுக்கு கொஞ்சமாவது பயமிருக்கானு பாருங்க அப்படின்னு சொல்லிக்கொண்டே [எனக்கு ஆடிய ஆட்டம் எனக்குதானே தெரியும் இவாளுக்கு எங்கே புரியும் ஆன மச்சானுக்கு புரிஞ்சிபோச்சி அதுக்குதேன் உடனே தண்ணீரை நீட்டியது]
கொஞ்சநேரம் அப்படியே போய் அமர்ந்து தண்ணீரருந்திவிட்டு மீண்டும் ஸ்டாட்
இதுதான் தண்டாரம் கிரைண்டரைவிட படுவேகமாய் படுவேகத்திலும் வேகமாய் சுற்றியும் ஆட்டியும். அசதியோடு கொண்டுவந்து தள்ளிவிட்டது. ஆனால் எதுவும் நடக்காததுபோல் இறங்கிவந்தோம் பேசிவைதுக்கொண்டு அதே தோழியும் நானும். மயக்கம் கண்ணைக்கட்ட அப்படியிருந்து விடுவோமா அடுத்து

இதோ  இதுதான் ட்ரைனாமாம் என்னாமா போகுது. போட்டதே ஒரு சடன் பிரேக் போட்டதும்  அடித்ததே முதுகுதண்டில் [அதெல்லாம் யாருக்கு வலிச்சது அப்பறமுல்ல இருக்கு அம்மா வலிக்குதே]அப்படியே பின்னாடியேபோய்
 சுத்தி சுத்தி ஒருவழியாகி, உடல் வலியாக்கி கொண்டுவந்து நிறுத்தியது.
அடுத்து அடுத்து என கிட்டதட்ட அனைத்திலும் ஏறியாச்சி.
அப்ப போட்டோ எங்கே அப்படிங்கிறீங்களா
போட்டோக்கள் எடுக்க ஆள்வேணுமுல்ல.3. 4. கேமுக்கு கூடவந்தாக. அப்புறம் அவுகளுக்கு சோலியிருக்காதா அதேன்.


ஆனாலும் ஆடிய ஆட்டமிருக்கே. கொண்டுபோன சாப்பாட்டைக்கூட [ஒரு பிளேட் மட்டுதான்] சரியாக சாப்பிடலை. இதில் என் செல்லதின் பர்சைவேறு[அதில் பெருநாள்காசு 150 திர்கம் இருந்தது] யாறோ அபேஸ் பண்ணிட்டாங்கோ.
[உறவினர்கள் கொடுக்கும் பெருநாள் காசை பெருநாள் லீவில் வெளியில்போகும்போது எப்போதுமே நாந்தான் செய்வேன் என  பெட்ரோல் அல்லது. எண்ட்ரஸ் டிக்கெட் அல்லது சாப்பாடுயென ஏதாவது அவனின் பணதிலிருந்து செலவு செய்வான் தனெக்கென்று எதுவும் அதில் தனியாக செய்துகொள்ளமாட்டான் அன்று வேண்டாம் இருக்கட்டும் வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டோம்.அவனிடமிருந்து நிறைய நாங்கள் கற்றுகொள்கிறோம்.]

 நாங்க ஜாமான்கள் வைதுவிட்டுபோன இடத்தில் விளையாட டிரஸ் மாற்றிவிட்டு அதிலேயே பர்சையும் வைத்துவிட்டு போயிருக்கான்.வந்துபார்த்தால் காணோம்.

 பாவம் புள்ள சாப்பிடவேயில்லை தான்போன அத்தனை ரையிடுகளுக்கும்போய் பார்த்து களைத்துபோய் வந்தான் கிடைக்காமல். எத்தனை சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. மம்மி எவ்வளவு கேர்ஃபுல்ல வைத்திருந்தேன் தெரியுமா.எப்படி மம்மி போனதுன்னு.அதுக்குதான் நான் டிக்கெட் எடுக்கிறேன் சொன்னேன் என்று ஒரே புலப்பம். சரி விடு நீ யாருக்கோ பெருநாள் காசு கொடுதேன்னு நினைச்சிக்கோன்னு சொல்லி சமாதானப்படுத்தி அழைத்துவந்தோம்.

ஆடிய ஆட்டம் 1 வாரம்வரை ஆட்டியது உடம்பை. ஆனாலும் இன்றுவரை தோழிதிட்டியததையும். கத்தியதையும்.  நினைக்கும்போதெல்லாம் சிரிப்புவரும். இதோ சிர்த்துக்கொண்டேதான் இதை எழுதினேன்.
சில சம்பவங்கள் மனதில் தங்கிவிடும் இதுவும் அதுபோலதான்.

இனி அடுத்த ஆட்டத்தில் சந்திப்போம். இருக்கே அடுத்து மலையேறியது
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் அன்புடன் மலிக்கா

16 comments:

எல் கே said...

ungak koodave vantha feeling. nalla narration malikka

Jaleela Kamal said...

haahaa நாங்களும் போனோம் ஆனால் இதிலெல்லாம் ஏற மூச்சு கூட விட மாட்டேன், ஆனா தப்பி தவறி நீங்க என் கூட ஏறினீங்க் நான் போடும் சத்ததில் தலை கீழ நிற்கும் போதே வாங்க அக்கா குதிச்சிடலாம் என்பீர்கல்.

ஸாதிகா said...

ஹ்ம்ம்ம்..இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா..?ஒன்றுக்கு இரண்டு பிரஷர் மாத்திரைகளை போட்டு விட்டு இந்த ரைடுகளில் எல்லாம் ஒன்றுமே விட்டு வைக்காமல் போன வருடம் வரை போய் வந்தவள் தான்.இப்பதான் டாக்டர் கறார் ஆக சொல்லி விட்டார்.ரிஸ்க் எடுக்காதே என்று, :-(

சைவகொத்துப்பரோட்டா said...

ரொம்ப "கிலி"யாட்டம் போல் இருக்கே :))

'பரிவை' சே.குமார் said...

Appadiyey Al ainnukkey kottip poyittinga akka...

ஹுஸைனம்மா said...

எக்கா மலிக்காக்கா, அந்தப் பெருநா போய் இந்தா ஹஜ் பெருநா வரப்போவுது..இப்பத்தான் இத எழுத நேரங்கிடச்சுதாக்கும்? கல்யாணத்துக்குக் கூப்பிட்டா சீமந்தத்துக்குத்தான் வருவீய போல!! :-))

ஹி.. ஹி.. வேறொண்ணுமில்ல, இப்படி தகிரியமா எல்லாத்துலயும் ஏறி இறங்கிருக்கீங்களே, அந்தப் பொறாமைதான்!! நானும் ஜலீலாக்கா மாதிரிதான்!!

ஆமா, நானும் பெருநாளைக்கு அடுத்த நாள் ஃபன் ஸிட்டி வந்திருந்தேனே, சொல்லிருந்தா (உங்க சாப்பாட்டை ஒரு கை) பாத்திருக்கலாம். எங்கூட வந்தவிங்க எல்லாரும் இதுபோல ரைட்ல எல்லாத்துலயும் ஏறுனாங்க, நான் சாமான்செட்டைக் காவல் காத்துகிட்டு உக்காந்திருந்தேன்!! :-(((

// ஸாதிகா said...
ஹ்ம்ம்ம்..இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா..? ... இந்த ரைடுகளில் எல்லாம் ஒன்றுமே விட்டு வைக்காமல் போன வருடம் வரை போய் வந்தவள்//

ஆத்தீ... எல்லாமே ரவுடிக்கூட்டமா இருக்கும்போல.. எங்கூட்டுக்காரர் சொல்வார், “நீ வாய்கிழிய பேச மட்டுந்தான் லாயக்கு”ன்னு, நெசந்தான் போல.. ஹூம்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இப்படி அசால்ட் ஆறுமுகம்போல் அனைத்திலும் தைரியம் போக கற்றுக் கொடுத்ததே அவுகதானே//
இதுல வேற ஏதோ பிளான் இருக்குனு நினைக்கிறேன்... பாத்து கவனமா இருங்கக்கா... ஹா ஹா அஹ

//பேஷ்மெண்ட் வீக்காயிருந்தாலும் நாம வெளியில் [காட்டிக்கமாட்டோமுல்ல//
இந்த வம்புக்கு தான் நான் ஜஸ்ட் வேடிக்கை மட்டும் பாத்தேன்... ஹி ஹி ஹி

துபாய்ல இருந்தப்ப ஒரு முறை இந்த funcity போய் இருக்கோம்... எப்பா... rides எல்லாம் செம பயமா தான் போச்சு...
பட் ஜாலி தான்... உங்க போஸ்ட் படிச்சு அந்த ஞாபகம் வந்துடுச்சு...

Asiya Omar said...

மலிக்கா உங்கள் தோழியுடன் கூடிய உரையாடல் வாசித்து இன்னும் சிரித்து முடியலை.
மகன் பணம் தொலைத்தது பற்றி எழுதியிருந்தீங்க,சங்கடமாக இருந்தது,இனிமேல் உஷாராக இருக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

அப்ப காசு சிலவு மிச்சம் இல்லையா கார்த்தி.. ஹா ஹா.

ஜலிக்கா இப்படியா நீங்க அச்சோ.
நான் குதிக்கமாட்டேன் வேணுமுன்னா உங்களுக்கு துணையா பக்கத்திலாருமிருந்தா,,,,,,,,,,,,, தள்ளிவிடமாட்டேன்னு சொல்லவந்தேன்.. ஹை

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
ஹ்ம்ம்ம்..இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா..?ஒன்றுக்கு இரண்டு பிரஷர் மாத்திரைகளை போட்டு விட்டு இந்த ரைடுகளில் எல்லாம் ஒன்றுமே விட்டு வைக்காமல் போன வருடம் வரை போய் வந்தவள் தான்.இப்பதான் டாக்டர் கறார் ஆக சொல்லி விட்டார்.ரிஸ்க் எடுக்காதே என்று, :-(//

அச்சோ அச்சோ எங்களுக்கு ரிஸ்கெல்லாம் வரிக்கி சாப்பிடமாதிரி.

நாங்க பிரஷ்சர் மாத்திரையெல்லாம் போடாமயில்ல [அதெல்லாம் நமகில்லைங்கோ] ஏறினோம். அதிலும் அதே தலைகீழ் 3 தடவையில்ல போனோம்.

பில்டப்பாமுல்ல பில்டப்பு யார்கிட்ட:}[ஹோ ஹோ ஹோ]

அன்புடன் மலிக்கா said...

சைவகொத்துப்பரோட்டா said...
ரொம்ப "கிலி"யாட்டம் போல் இருக்கே :))//

நல்லவேளை கிளிக்கு கிலிபிடிக்கலை. சை கோ பா.


சே.குமார் said...
Appadiyey Al ainnukkey kottip poyittinga akka/

ஓசியில் வந்துட்டீங்க குமார் காசுகொடுங்க. எப்புடி..

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
எக்கா மலிக்காக்கா, அந்தப் பெருநா போய் இந்தா ஹஜ் பெருநா வரப்போவுது..இப்பத்தான் இத எழுத நேரங்கிடச்சுதாக்கும்? கல்யாணத்துக்குக் கூப்பிட்டா சீமந்தத்துக்குத்தான் வருவீய போல!! :-))//

நாங்க லேட்டா வந்தாலும் ஸ்மார்டா வருவோமுல்ல பில்டப்போட..

//ஹி.. ஹி.. வேறொண்ணுமில்ல, இப்படி தகிரியமா எல்லாத்துலயும் ஏறி இறங்கிருக்கீங்களே, அந்தப் பொறாமைதான்!! நானும் ஜலீலாக்கா மாதிரிதான்!!//

அதுசரி அவகளோட கூட்டா அப்ப ஒருதபா நாம போறோம் உங்களையும் ஜலிக்காவையும் ஒன்னா உக்காரவைக்கிறோம் தலைகீழ் நிறுதுறோம் கதவைக்கிறோம் ஓகே. புடிக்காடி அங்கிருந்து குதிக்கலாம் இல்லையின்னா பறக்கலாம் ரெண்டில் ஒன்னுதான் செய்யனும் சரியா..

/ஆமா, நானும் பெருநாளைக்கு அடுத்த நாள் ஃபன் ஸிட்டி வந்திருந்தேனே, சொல்லிருந்தா (உங்க சாப்பாட்டை ஒரு கை) பாத்திருக்கலாம். எங்கூட வந்தவிங்க எல்லாரும் இதுபோல ரைட்ல எல்லாத்துலயும் ஏறுனாங்க, நான் சாமான்செட்டைக் காவல் காத்துகிட்டு உக்காந்திருந்தேன்!! :-(((/

ஆகா மிஸ்ஸாயிடுதே மிஸ்ஸாயிடுதே
கத்துரத பாக்குறது மிஸ்ஸாயிடுதே.

காவலுக்குதான் ஆளிருக்குல்ல அங்கே நீங்கவேற ஏன் ஹுசைன்னமா அதெல்லம் வேறு செய்தீக..

// ஸாதிகா said...
ஹ்ம்ம்ம்..இதுக்கு இவ்வளவு பில்ட் அப்பா..? ... இந்த ரைடுகளில் எல்லாம் ஒன்றுமே விட்டு வைக்காமல் போன வருடம் வரை போய் வந்தவள்//

ஆத்தீ... எல்லாமே ரவுடிக்கூட்டமா இருக்கும்போல.. எங்கூட்டுக்காரர் சொல்வார், “நீ வாய்கிழிய பேச மட்டுந்தான் லாயக்கு”ன்னு, நெசந்தான் போல.. ஹூம்..//

சேர்ந்தாச்சில்ல இப்ப இனி நீங்களும் ரவுடிதான். ஆத்தி நாங்க வெரும் ரவுடிதான் நீங்கதான் ஜில்லா ரவுடி

வாய்கிழிய பேசுவதிலேயே மனுசன் நொந்துட்டார் அதேன் இப்படி சொல்லியிருக்கார் வாயுள்ளை பிள்ளை பிழைக்கும்.

காஞ்சி முரளி said...

nalla pathivu...!

ஜெய்லானி said...

அட மேலே ஏரியதும் கண்ணை மூடிகிட்டா ஒன்னும் தெரியாதே..!! ஒரு தடவை ரோலர் கோஸ்டரில் ஏறி அது ஆட்டிய தாலாட்டில தூங்கிய ஓரே ஆள்நான் தான் ஹி..ஹி.. !! ஹய்யோ..ஹய்யோ...

Jaleela Kamal said...

ஏன் ஏன் இந்த கொல வெறி.
நான் ஏறவே மாட்டேன் அப்பரம் எங்கிருந்து தல் கீழ நிற்க வைப்பீங்க

Anonymous said...

மலிக்கா மேடம் லேட்டா வந்து உங்கள் பயணத்தை இல்லை இல்லை... ஆடிய ஆட்டத்தை படித்தாலும் ரொம்ப ரசித்து படித்தேன்.... சிரிப்பை அடக்க முடியல.நான் பாட்டுக்கு சிரிச்சா என் பசங்க ஏன் மா தனியா நீங்க பாட்டுக்கு சிரிக்கிறீங்கன்னு கேக்க போறாங்களேன்னு அடக்கிக்கிட்டேன்.
படிக்கும் போது ரொம்ப ஸ்வார்ஸ்யமாக இருந்துச்சு... எனக்கு ஏத்த ஜோடி நீங்கதாங்க.....
ஆமாங்க எனக்கு இந்த மாதிரி அதிரடி ரைட் எல்லாம் போக ரொம்ப பிடிக்கும்.கல்யாண புதுசில் இந்த ஃபன்சிட்டிக்கு போனது... என் கணவர் எனக்கு நேர்மாற்றம்.என் தோழியைதான் இழுத்து கொண்டேன்.நீங்கள் சொல்லும் அதே கதறல் புலம்பல் தான்னு வச்சுக்கங்களேன்.... அதான் முதலும் கடைசியும்....
இதுவரை எனக்கு செட் இல்லாததால எனக்கு எல்லாமே இண்ட்ரஸ்ட் போச்சுங்க.....
உங்கள் எழுத்துக்கே.... ஒரு ஈர்ப்பு தன்மை இருக்கு....
நீங்கள் இந்த அமீரகத்தில் எங்கப்பா இருக்கீங்க? உங்களையெல்லாம் சந்திக்கும் ஆவல் எனக்கு அதிகமாகவே இருக்கு... ஜலீலா அக்கா கூட நான் ஃபோனில் கூட பேசுவேன்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்க நம்பரையும் தாங்களேன்...

அன்புடன்,அப்சரா.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.