அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, December 7, 2010

எங்கே செல்லும் இந்த பாதை! [ஒரு பகீர்]


காலையிலேயே இப்படி ஒன்ன நான் பார்க்கனுமா.[யாரது அங்கே அப்ப மதியம் பாக்கலாமான்னு]. அட சொல்லவிடுங்கப்பு.. சரி நேசனல்டே லீவில் யு ஏ இ .சுற்றியதை போட்டோவோடு அரங்கேற்றி. சிலபலருக்கு காதில் மற்றும் வயிற்றில் புகையை ஏற்படுதலாமேன்னுதான் அட பொசுபொசுன்னு பொங்குமே செல்லப்பொறாமை அதை பார்க்கலாமேன்னு. பிளாக் பக்கம் வந்தேன். நம்ம அந்நியன் 2. அழைதிருந்தாரேன்னு அவர்வலைப்பக்கம் எட்டிபார்க்கபோனேன். போனேனா அச்சோ அப்படின்னு தலையில் கைவைத்து உக்காந்துட்டேன். வச்ச கண்ணு வாங்கமா பதட்டதோட பார்த்தேன். இது நம்ம நாட்டிலா? ஒருதரம் கண்ணைகசக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன் லேசாமனசு உள்ளுக்குள் ஆட்டம்கண்டதுபோல தோணிச்சி. ஏன்னா நாம தமிழச்சி ல்ல, அதான். சரி என்னத்த பார்த்தா அதச்சொல்லு இங்கே ஹாட்பிட் எகிறுதுங்கிறீங்களா!
சரி சரி இதோ அட அத நீங்களும் பாருங்கப்பு.

அந்நியன் 2

.ஏங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ. காலம் காலம் செய்த கோலம் யாரோ யாரோ உணர்வாரோ.

தப்புதப்பா பாடுறேனோ ஏதோ பாடிட்டேன் விடுங்கோ.

காலத்தின்மேல பழியப்போட்டுவிட்டு மனிதயினம் வெகுவாக தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறது. நாகரீத்தில் சிக்கி அலைக்கழிஞ்சி  சீரழிஞ்சிபோகுதேன்னு வருதப்பட்டா. இது அந்தகால தமிழ் கலாச்சாரமுன்னு சான்றிதழ் வேறு கொடுக்குறாங்கப்பு.என்ன செய்ய கண்ணிருக்கு பாக்க காதிருக்கு கேக்கன்னு பார்த்துட்டு இருக்கமுடியல அதான் உங்ககிட்ட சொல்லலாமேனு சொல்லுறேன்.

என்னத்தச் சொல்ல காலம் கலிகாலம் முத்திபோய் முத்திபோய்
கடைசியில் இருக்கும் கலச்சாரமும் சீரழிஞ்சிபோச்சி. மிச்ச சொச்சமிருக்கும் மானமும் காற்றில் கலந்திடும் சூழல உருவாயிடுச்சி.
[என்னது அதுவும் போச்சா அடியாத்தி] வெறுமன நிக்கிற ஊர்ல சட்டபோட்டா கேலிதான் பண்ணுவாகப்பு பாத்துயிருங்க.

நாகவநாகரீக வளர்ச்சியின் உச்சதிலிருக்கும் மனிதர்களுக்கு கீழே இருந்துகொண்டு கத்தினால் கேட்காது. ஒருவனுக்கு ஒருத்தி.
உடலும் மனமும் ஒருவருக்குதான் என்னும் தமிழ்கலாச்சாரம் மாறிபோச்சா[சோ] என்றே தோன்ற வைக்கிறது.
உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் மேலிட கட்டிப்பிடிப்பதும் பலயிடங்களில்முத்தமிடுவதும். கணவன் மனைவிக்கே சொந்தமான ஒன்றை,   அவர்களின் கண்முன்னே அடுத்தவர்கள் நடத்தும் கேலிக்கூத்து அதிரத்தான் வைக்கிறது.

காலம் மாறலாம். கோலம் மாறலாம்.எத்தனையோ வழிகளில் நாகரீகம் தோன்றலாம் ஆனால் மனிதனெனுக்கென்று வகுக்கப்பட்ட சில எல்லைகளை தாண்டுவது சரியல்ல. அது அவனைமட்டுமல்ல அவனைசார்ந்தோரையும். சுற்றியுள்ளோரையும் பாதிக்கும்.

.நம்மை படைக்கப்பட்டதின் நோக்கமறிந்து,இறைவன் காட்டிய நேர்மையான வழியில் நடந்து,  உணர்வுப்பூர்வமான உணர்களை மதிப்போர்களுக்கு மட்டுமே இதை சொல்கிறேன்.

இப்படிதான் வாழவேண்டுமென்று வரையரை வகுத்து
வாழ்வதுதான் வாழ்க்கை
எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல
வாழ்வதும் வீழ்வதும்.
சிறப்புறுவதும் சீரழிவதும்
அனைத்துமே! அனைத்துமே
உங்கள் கையில்,உங்கள் மனதில் உங்கள் எண்ணத்தில்.
உங்களிடமே!  உங்களிடம்தான்..

ஆதங்கத்தோடு.
அன்புடன் மலிக்கா

26 comments:

எல் கே said...

மலிக்கா இதை எல்லாம் சொன்னால் தான் , "கலாச்சார காவலர்களா நீங்கள் " என்று பதில் கேள்வி கேட்கிறார்கள் . என்ன செய்ய ?/

Chitra said...

இப்படிதான் வாழவேண்டுமென்று வரையரை வகுத்து
வாழ்வதுதான் வாழ்க்கை
எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல
வாழ்வதும் வீழ்வதும்.
சிறப்புறுவதும் சீரழிவதும்
அனைத்துமே! அனைத்துமே
உங்கள் கையில்,உங்கள் மனதில் உங்கள் எண்ணத்தில்.
உங்களிடமே! உங்களிடம்தான்..

ஆதங்கத்தோடு.


......தெளிவாக உணர்வுகளை பகிர்ந்து விட்டீர்கள்.

அன்புடன் மலிக்கா said...

LK said...
மலிக்கா இதை எல்லாம் சொன்னால் தான் , "கலாச்சார காவலர்களா நீங்கள் " என்று பதில் கேள்வி கேட்கிறார்கள் . என்ன செய்ய.//

கலாச்சாரத்தை கட்டி காக்கசொல்லவில்லை அதை அழிக்காமலாவது பார்த்துக்கொள்ளவேண்டாமா! என்பதுதான் நம் ஆதங்கம்.

அதற்குதான் சொல்கிறேன்.
பிறரின் செயலில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது. நல்லதை மட்டுமே. தீயதையல்ல என்று. நம்மையும் நம்மைசார்ந்தவர்களையும் நல்வழியில் கொண்டு செல்லவேண்டியது நம்கடமை. அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் உரிமை..

மிக்க நன்றி கார்த்திக்..

ஜெய்லானி said...

இப்பதான் 2 நடந்து இருக்காம் ..இன்னும் வேற 25 பாக்கி இருக்காம் இந்த மாசத்துக்குள்ள ...!!

அப்போ இதுல இத்தனை பேர் இன்னும் ஆர்வமா இருக்காங்களோ..?

வாழ்க தமிழ் ...வாழ்க தமிழகம் ...


(( தப்பா பேசினா இந்திய இறையாண்மைக்கு எதிர்னு உள்ளே பிடிச்சி போட்டுடுவானுங்க ))

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
இப்படிதான் வாழவேண்டுமென்று வரையரை வகுத்து
வாழ்வதுதான் வாழ்க்கை
எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல
வாழ்வதும் வீழ்வதும்.
சிறப்புறுவதும் சீரழிவதும்
அனைத்துமே! அனைத்துமே
உங்கள் கையில்,உங்கள் மனதில் உங்கள் எண்ணத்தில்.
உங்களிடமே! உங்களிடம்தான்..

ஆதங்கத்தோடு.


......தெளிவாக உணர்வுகளை பகிர்ந்து விட்டீர்கள்
//

உணர்வுகளும் உணர்ச்சிகளும் அடங்கியவர்களே மனிதர்கள். அதை வெளிப்படும்முறையில்தான் நம் வாழ்க்கையின் நல்லறம் அமைந்துள்ளது இதை மறந்தவர்களின் வாழ்வு சொல்லவேண்டியதில்லையென நினைக்கிறேன்.

நம் வாழ்க்கை நம் கையில் ஆதாவது நம் எண்ணும் எண்ணத்தில்..

மிக்க நன்றி சித்ரா

Geetha6 said...

சிந்திக்க வேண்டியது தான் !

காஞ்சி முரளி said...

ஹலோ...! ஹல்லல்லோ...!
நீங்க... புதுசா...!
இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா...!

எங்க நாட்டுல... வீட்டுல... காட்டுல... மேட்டுல...
நாங்க தினம்தினம் பார்த்துட்டுதான்...
அந்த வலியிலத்தான்
உங்களுக்கு சில கருத்துரை போட்டேன்... நீங்க என்ன கிண்டல் பண்ணீங்க...

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
இப்பதான் 2 நடந்து இருக்காம் ..இன்னும் வேற 25 பாக்கி இருக்காம் இந்த மாசத்துக்குள்ள ...!!

அப்போ இதுல இத்தனை பேர் இன்னும் ஆர்வமா இருக்காங்களோ..?//

கொடுமங்கோ கொடுமங்கோ. என்ன செய்ய.

வாழ்க தமிழ் ...வாழ்க தமிழகம் ...//

வாழ்க மக்கள் அப்படின்னுமட்டும் சொல்லிராதீங்கப்பு..


//(( தப்பா பேசினா இந்திய இறையாண்மைக்கு எதிர்னு உள்ளே பிடிச்சி போட்டுடுவானுங்க //

அதுவேறயா. எங்கய்யா பேசவிடுறீங்க..

அன்புடன் மலிக்கா said...

Geetha6 said...
சிந்திக்க வேண்டியது தான்.//

சிந்திக்கனும் அப்பதான் நல்ல தீர்வுகிடைக்கும்..

நன்றி கீதா

pichaikaaran said...

thought provoking ...

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
ஹலோ...! ஹல்லல்லோ...!
நீங்க... புதுசா...!
இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா...!//

என்னது சகஜமா.. அம்மடியோ நமக்கு இதெல்லாம் ஒன்னுமே தெரியலையே..

//எங்க நாட்டுல... வீட்டுல... காட்டுல... மேட்டுல...
நாங்க தினம்தினம் பார்த்துட்டுதான்...
அந்த வலியிலத்தான்
உங்களுக்கு சில கருத்துரை போட்டேன்... நீங்க என்ன கிண்டல் பண்ணீங்க.

என்னது கிண்டல் பண்ணினேனா. எப்ப சகோ ஏன் இப்படி. எங்கே அதை மீண்டும் போடுங்க..

crown said...

இது நாகரிகத்தின் வளர்சியா?
மன நலம் குன்றியவர்களின் செயலா?
இதுவா தழிழ் கலாச்சாரம்?
தழுவிக்கொ(ல்)ள்ளும் சமாச்சாரம்,
விபச்சாரத்திற்குபோட்ட அச்சாரம்,
...இதுக்கு இத்தனைப்பிரட்சாரம்
எங்கே செல்லும் இந்த போதை?
மன்னிக்கவும் பாதை?
இது சமூகத்தின் மேல் தரும் உபாதை

'பரிவை' சே.குமார் said...

எங்கே செல்லும் இந்த பாதை?
சிந்திக்க வேண்டியதுதான்..!

Anonymous said...

this some what seems to be like scientology type wedding.

enna kodumai idhu .

அந்நியன் 2 said...

என்னையையும் உங்களில் ஒருவனாய் நினைத்து, உங்கள் தளம் மூலம் ஏழையின் தளத்திற்கு வழி காட்டிய, கவியரசிக்கு கோடி நன்றிகள்

ஆமினா said...

அந்த வீடியோ பாத்து எனக்கும் பயங்கரமா கோபம் வந்துச்சு மலிக்கா
இப்ப கிராமத்துல உள்ளவங்க கிட்ட இருக்குற மைனஸை அவங்கயூஸ் பண்ணிகிறாங்க. அதாவது இதுக்கு பின்னாடி பெரிய கும்பல் இருக்கும்.இதை பரப்ப என்ன வேண்டுமானாலும் செய்ய துணியலா. ஏழைகிட்ட பணம் கொடுத்தா போதும்னு நெனச்சு தான் இப்ப கிராமங்களீல் இந்த கூத்தை ஆரம்பிச்சுருக்காங்க போல

விபச்சாரத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் இருக்க போகுது?

GEETHA ACHAL said...

என்னத சொல்ல அக்கா..எல்லாம் எங்க போய் முடியுமோ தெரியவில்லை...

காஞ்சி முரளி said...

////என்னது கிண்டல் பண்ணினேனா. எப்ப சகோ ஏன் இப்படி. எங்கே அதை மீண்டும் போடுங்க.. ///

போட்டாச்சு...!
போட்டாச்சு...!
இந்த எவிடன்சு போதுமா..!
இன்னும் கொஞ்சம் வேணுமா...!

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்ல விழிப்புணர்வு பதிவு

கணவன் மனைவி ஆடையாகவும்
மனைவி கணவனுக்கு ஆடையாகவும்
இருக்கிறார்கள்(அல் குர்ஆன்)
இப்படி இறைமறை கூறுகிறது

இது போன்ற கேடுகெட்டவர்கள்
அனைவரும் அனைவருக்கும் ஆடைகள் என்று பொதுவாக்க பார்க்கிறார்கள்
ஜக்கிரதை

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
சகோ அவர்களுக்கு
எனது ப்ளாக்கில் யார் அந்த பக்கீர்ஷாக்கள் என்ற தலைப்பில் தொடர் எழுதுகிறேன்
உங்களுடைய கருத்துக்களையும்
ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கேட்க வருத்தமா தான் இருக்குங்க...என்ன செய்ய? மீடியாவின் ஆதிக்கம் ரெம்ப மோசமா போயிட்டு இருக்கு... எங்க போய் முடியுமோ தெரியல?

Vijiskitchencreations said...

காலம் மாறலாம். கோலம் மாறலாம்.எத்தனையோ வழிகளில் நாகரீகம் தோன்றலாம் ஆனால் மனிதனெனுக்கென்று வகுக்கப்பட்ட சில எல்லைகளை தாண்டுவது சரியல்ல. அது அவனைமட்டுமல்ல அவனைசார்ந்தோரையும். சுற்றியுள்ளோரையும் பாதிக்கும்
super lines.

இப்படிதான் வாழவேண்டுமென்று வரையரை வகுத்து
வாழ்வதுதான் வாழ்க்கை
எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் என்பதல்ல
வாழ்வதும் வீழ்வதும்.
சிறப்புறுவதும் சீரழிவதும்
அனைத்துமே! அனைத்துமே
உங்கள் கையில்,உங்கள் மனதில் உங்கள் எண்ணத்தில்.
உங்களிடமே! உங்களிடம்தான்..
கரெக்டா சொல்லிட்டிங்க.

மல்லிகா. உங்களுக்கு அடுத்து ஒரு ஹோம் வொர்க் இருக்கு. சமத்தா வந்து ஒரு பொடி நடை போட்டு வாங்கோ.

www.vijiscreations.blogspot.com

ஸாதிகா said...

மலிக்கா ஆளியே காணவில்லையே???

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

அன்புடன் மலிக்கா said...

கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவரும் எனது நன்றிகள்..

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
மலிக்கா ஆளியே காணவில்லையே
//

இங்கதாங்கக்கா இருக்கேன் கொஞ்சம் மனச்சோர்வுகள் அதான் அடிக்கடிபோஸ்ட் போடவோ அடுத்தாத்துபக்கங்கள் வர்வோ மனசில்லை. வேறொன்றுமிலைக்கா..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.