அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, November 14, 2012

கண்ணா ஆணா பொறக்க ஆசையா?

 
 
 
 

கர்ப்பதில் இருப்பது ஆணா பெண்ணா கருவியின்மூலம் சோதனை செய்யப்பட்டு ஆண் என்றதும் இந்த உலகத்தையே வாங்கிவிட்டதுபோல் பரவசமடையும் பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள்.. அதுபெண்ணாகிவிட்டால் முகங்களும் மனங்களும் சுழிக்கும் சுழிப்புகள் அப்பப்பா இவ்வுலத்தில் பல இடங்களில் கண்கூடாக பார்க்கும் ஒன்றாகிவிட்டது..

தலக்குழந்தை ஆண்பிள்ளைதான் வேண்டுமென்று வேண்டாத பெற்றோர்களே இல்லையென்னுமளவிற்க்கு.. அட ஆணாய் பொறந்தால் எவ்வளவு பாடுகள் இருக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு எவ்வளவு பொருப்புகள் சுமக்கவேண்டிருக்கு. ஆனால் அதையெல்லாம் பற்றி யார் கவலைப்படபோகிறார்கள்.. இதோ இப்படித்தான் நடக்கிறது

 "ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்”
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
 
கண்ணா ஆணா பொறக்க ஆசையா? இல்லையா?
ஆணா பொறந்தா என்ன படுறாங்கப்பா பாருங்க அதைக்காண ஆசையா இதோ இந்த லிங்கில் போய் பாருங்கள்.. ஆண் பாவம்
 என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்..
 
படித்துவிட்டு மறக்காம உங்க கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்க. அதோடு உங்க ஆதங்கமோ சந்தோஷமோ அதையும் மறக்காம சொல்லிட்டுபோனாதான் நான் இப்புடி எழுதியது சரியான்னு எனக்கு தெரியும்.. ஓகேதானே டீலுக்கு ரெடியா எங்கே ஒன் டூ திரி...
 
என்றும்
அன்புடன் மலிக்கா
 
 
 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பிறவாத வரம் வேண்டும்... இணைப்பில் பார்க்கிறேன்...

நன்றி...
tm1

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.