அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, October 11, 2010

பசுநெய் ஆப்பம்.




தேவையானவை
ஆப்பமாவு 5, கரண்டி [இது புழுங்கல் அரிசியில் அரைத்த ஆப்பமாவு]
பசுநெய் தேவையான் அளவு
முட்டை 4
உப்பு
சோடாப்பு
கருவேப்பில்லை


ஆப்பமாவுடன் பசுநெய். முட்டை [நன்றாக அடித்து அதனுடன் சேர்க்கவும்] உப்பு சோடாப்பு கருவேப்பில்லை [நறுக்கியும் போடலாம்]  சேர்த்து கலக்கைக்கொள்ளவும்
ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய கரண்டியில் 2 கரண்டி எடுத்து ஊற்றவும்
2. நிமிடம் மூடி வைக்கவும்
திறந்து திருப்பிப்போடவும்
இருபுறமும் வெந்து சிவந்ததும்

எடுத்து பரிமாறவும்.
இதற்கு எங்க பகுதிபக்கம் ஜீனி அதன்மேல் தூவி சாப்பிடுவோம். காரத்துடன் சாப்பிட இதற்க்கு முட்டைகுழம்பு,அல்லது
சிக்கன் மட்டன் குழம்பு, தொட்டு சாப்பிடலாம்.

நல்லவாசனையோடு படு சூப்பராக இருக்கும்
 டிஸ்கி//இந்த சாக்லெட் மெல்டானதும் மஃரூப் அதில் தடவி சாப்பிடுவான்.
பசங்களின் டேஸ்டே வித்தியாசமானதுதானே..


24 comments:

பனித்துளி சங்கர் said...

அஹா அருமை . ஆமா இந்த புகைப்படங்கள் எல்லாம் நீங்க இந்த ஆப்பம் செய்யும் பொழுது எடுத்ததா !? மிகவும் அசத்தலானப் புகைப்படங்களுடன் சிறந்த செய்முறை விளக்கம் . பகிர்வுக்கு நன்றி

சிவகாமி said...

சூப்பர்ப்ப் போட்டோக்கள் மலிக்கா அசத்தலாக அனைத்தையும் செய்யும் திறனை எங்கிருந்து கற்றீர்கள்.

செய்முறையும் ஆப்ப்பமும் சசூப்பரோ சூப்பர் மல்லி.

அன்புடன் மலிக்கா said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அஹா அருமை . ஆமா இந்த புகைப்படங்கள் எல்லாம் நீங்க இந்த ஆப்பம் செய்யும் பொழுது எடுத்ததா !? மிகவும் அசத்தலானப் புகைப்படங்களுடன் சிறந்த செய்முறை விளக்கம் . பகிர்வுக்கு நன்றி.//


ஆமாம் சங்கர் நான் சமைக்கும்போது நானே எடுக்கும் போட்டோக்கள்தான் இதெல்லாம்.
ரொம்ப சந்தோஷம் சங்கர்.
அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி ..

அன்புடன் மலிக்கா said...

சிவகாமி said...
சூப்பர்ப்ப் போட்டோக்கள் மலிக்கா அசத்தலாக அனைத்தையும் செய்யும் திறனை எங்கிருந்து கற்றீர்கள்.//

எல்லாம் ஆங்காங்கே கற்றுக்கொள்வதுதான் சிவகாமியம்மா.
அதை நினைவில் நிறுத்திக்கொள்வது என் வழக்கம். அவ்வளவுதான் வேரொன்றுமில்லை

//செய்முறையும் ஆப்ப்பமும் சசூப்பரோ சூப்பர் மல்லி.//

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிமா.
மிக்க நன்றி

Menaga Sathia said...

ஆப்பம் சூப்பராகயிருக்கு...

ஸாதிகா said...

மலிக்கா ஆப்பத்தை திருப்பிப்போடுவீர்களா?நாங்கள் அதனை அடை என்றல்லவா சொல்லுவோம்.

Chitra said...

அருமையான ரெசிபி. :-)

அன்புடன் மலிக்கா said...

Mrs.Menagasathia said...
ஆப்பம் சூப்பராகயிருக்கு.../

நன்றி மேனகா..



//Chitra said...
அருமையான ரெசிபி. :-)

நன்றி சித்ரா..

அன்புடன் மலிக்கா said...

//ஸாதிகா said...
மலிக்கா ஆப்பத்தை திருப்பிப்போடுவீர்களா?நாங்கள் அதனை அடை என்றல்லவா சொல்லுவோம்.//

அடைவேறு ஆப்பம் வேறுக்கா.
இது ஆப்பம்தான் சந்தேகம்வேண்டாம். மெதுவாக அடுப்பை வைத்து புழுங்கவைக்கலாம். திருப்பிபோட்டு சிறு நெய்விட்டு எடுத்தால் அதன் ருசியே தனிதான். நாங்க இதுபோன்ற. மஞ்சள் ஆப்பம் முட்டையாப்பம். சக்கரையாப்பம். எல்லாம் திருப்பிப்போட்டுதான் எடுப்போம் ஸாதிக்காக்கா.

Jaleela Kamal said...

அருமையான நெய் மணத்தோடு ஆப்பம்
முட்டை ஆப்பம் திருப்பி போட மாட்டோம்.
இது தோசை+ ஆப்பமா?
சாக்லேட் மெல்டானதும் பிள்ளைகளுக்குஇதான் இப்ப ரொட்டி, தோசை பிரெட்டில் இத வைத்தாதான் இறங்குது,அதுக்கு தான் நியுட்ரெல்லா வாங்கி வைத்து கொள்வது, மெல்டாக்கும் வேலையும் மிச்சம் ஹி

என்ன் எங்க பக்கமெல்லாம் வந்து ருசிக்க மாட்டீங்களோஒ

ஜெய்லானி said...

இதுக்கு பராசாப்பம் ன்னு ஒரு பேர் இருக்காமே உண்மையா..?...!!

ஜெய்லானி said...

இதுக்கு பராசாப்பம் ன்னு ஒரு பேர் இருக்காமே உண்மையா..?...!!

எம் அப்துல் காதர் said...

இது சூப்பரா டேஸ்டா இருக்கும். நாங்க 'அப்படியே சாப்பிடுவோம்னு' சொல்லமாட்டேன்னு சொல்லமாட்டேன்.

எம் அப்துல் காதர் said...

//இதுக்கு பராசாப்பம் ன்னு ஒரு பேர் இருக்காமே உண்மையா..?...!!//

ஆமா, இதுக்கு "பத்து முட்டை பராசாப்பம்னு" எங்க சைட்ல சொல்வாங்க தல!!

எம் அப்துல் காதர் said...

@!@ Jaleela Kamal said..

//என்ன் எங்க பக்கமெல்லாம் வந்து ருசிக்க மாட்டீங்களோஒ//

அதானே ???

அவங்க ரொம்ப பிஸி ஜலீலாக்கா, அப்பப்ப வந்து கண்டுக்குவாங்க.(u dont worry!!) ஹி.. ஹி..

அன்புடன் மலிக்கா said...

Jaleela Kamal said...
அருமையான நெய் மணத்தோடு ஆப்பம்
முட்டை ஆப்பம் திருப்பி போட மாட்டோம்.
இது தோசை+ ஆப்பமா?
சாக்லேட் மெல்டானதும் பிள்ளைகளுக்குஇதான் இப்ப ரொட்டி, தோசை பிரெட்டில் இத வைத்தாதான் இறங்குது,அதுக்கு தான் நியுட்ரெல்லா வாங்கி வைத்து கொள்வது, மெல்டாக்கும் வேலையும் மிச்சம் ஹி//

இல்லைக்கா இது ஆப்பம்தான் எங்க ஊர்பக்கம் இப்படிதான் செய்வோம்.
நியுட்ரெல்லாவும் இருக்கு. ஆனா இதுபோல் சாக்லெட் தடவி சாப்பிட ரொம்ப இஷ்டம்க்கா.

/என்ன் எங்க பக்கமெல்லாம் வந்து ருசிக்க மாட்டீங்களோஒ//

எப்பவும் வந்துட்டுப்போறோம் எப்பவாச்சிம் ருசிக்கதந்திருக்கீங்களா. படத்தை காட்டி ஏமாத்துறீங்கக்கா

நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
இதுக்கு பராசாப்பம் ன்னு ஒரு பேர் இருக்காமே உண்மையா..?...!!
//

அது எங்க பிலாச்சப்பம் அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அது இதுயில்ல.
அது சற்று தளர்ந்த மாவில் சுடுவாங்க..அண்ணாத்தே.

அன்புடன் மலிக்கா said...

எம் அப்துல் காதர் said...
இது சூப்பரா டேஸ்டா இருக்கும். நாங்க 'அப்படியே சாப்பிடுவோம்னு' சொல்லமாட்டேன்னு சொல்லமாட்டேன்.

நாங்களும் அதை துண்டு துண்டாக்கிதான் சாப்பிடுவோமுன்னு சொல்றேன்னு சொல்லவில்லை.

ஆத்தாடியோ:{

ஜெய்லானி said...

//எப்பவும் வந்துட்டுப்போறோம் எப்பவாச்சிம் ருசிக்கதந்திருக்கீங்களா. படத்தை காட்டி ஏமாத்துறீங்கக்கா //

நீங்க ரெண்டு பேரும் தனியா கொழுக்கட்டை சாப்பிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கு..மறக்கவில்லை...மறக்கவில்லை......

Vijiskitchencreations said...

சூப்பர் ரெசிப்பி. நல்ல கொழுப்புள்ள உணாவு. பசுநெய் இப்பவெல்லாம் எங்கு கிடைக்க்றது சொல்லுங்க. எல்லாமே கலப்படம்.

என் அம்மா கூட இதே போல் தான் செய்வாங்க. முட்டை இல்லாமல் ஆப்ப சோடா சேர்த்து செய்வாங்க.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பசு நெய் ஆப்பம் பாக்கவே சூப்பரா இருக்கே...
ஹ்ம்ம்ம்... யம் யம்..... :-))))

Jaleela Kamal said...

ஆமாம் நாங்க பாராசாப்பம் செய்வோம்,
மலிகா ஒரு நாள் 5 முனு அடுக்கோடு உங்களுக்கு சாப்பாடு கொண்டுவரஏன்


அப்படியே போர வழியில ஜெய்லான்னிக்கு கொழுக்க்ட்டை கொடுத்து டலாம்,

'பரிவை' சே.குமார் said...

ஆப்பம் சூப்பராகயிருக்கு.

ஜெய்லானி said...

//ஆமாம் நாங்க பாராசாப்பம் செய்வோம்,
மலிகா ஒரு நாள் 5 முனு அடுக்கோடு உங்களுக்கு சாப்பாடு கொண்டுவரஏன் //


ஒரு ஆளுக்கு மூனு அடுக்கு ஐஞ்சாஆஆஆஆ..!! இப்பவே மயக்கமா வருது எனக்கு ...!!


//அப்படியே போர வழியில ஜெய்லானிக்கு கொழுக்க்ட்டை கொடுத்து டலாம் //

எனக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ
கொழுக்கட்டையாஆஆஆஆஆஆஆ...!!

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.