அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, January 22, 2011

இறால் காய்கறி குழம்பு


தேவையானவை.

இறால் தேவையானளவு
முறுங்கைகாய் 2
கருணைகிழங்கு 1/2 கப்
பீன்ஸ் 10
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
மல்லிதூள் 2 ஸ்பூன்
சோம்புசீரகத்தூள் 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1ஸ்பூன்
மிளகாய்தூள் 2 ஸ்பூன்
புளி
ரயின்போ பால் 
ஆயில்
உப்பு
தாளிக்க கருவேப்பில்லை கடுகு.
சட்டியை சூடாக்கி ஆயில்விட்டு அதுசூடானதும், நறுகியகாய்கள் மற்றும் தலைநீக்கி சுத்தம் செய்த இறால் அனைத்தையும் போட்டு வேசாக வதக்கவும்.
அது சற்றுவதங்கியதும் மிளகாய்தூள் போட்டு
வதக்கவும்
புளியை சற்று ஊறவைத்து கரைத்து அத்துடன் மசாலாக்களையும் சேர்த்து கரைக்கவும்
வதங்கிய இறால் காய்களுடன் கரைத்த மசாலாவை ஊற்றவும்
தேவையான அளவு தண்ணீர்விட்டு  உப்புபோட்டு மூடிவைத்து, நன்றாக கொதித்து மசாலாவாசம் போனதும் திறந்து . கருவேப்பிலை,கடுபோட்டு தாளித்து  ஊற்றவும்

இரால் காய்கறி குழம்பு ரெடி.
இது தேங்காய்பால் சேர்க்காமல் ரெயின்போ பால் சேர்த்த குழம்பு.
சாதம். குபுஸ்.மற்றும் சப்பாதிக்கூடவும் சாப்பிட டேஸ்டாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா
ரசித்து பின் ருசிக்கவும்.

12 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வீட்டம்மாவுக்கு மெயில் அனுப்பிட்டேன் இதை....

Chitra said...

பார்க்கவே நல்லா இருக்குதே...

காஞ்சி முரளி said...

எல்லாம் செயற்கையான காய்கறியாய் (அதாவது... எந்த நாட்டின் காய்கறியோ) தெரிகிறதே...!
என்ன இருந்தாலும்... என் ஊரின்... என் தெருவின்... என் வீட்டு மர முருங்கக்காய் ருசியே... அப்பப்பா...!

'பரிவை' சே.குமார் said...

நானும் மெயில் அனுப்பியாச்சு... நீங்க பார்சல் அனுப்பினா நல்லாயிருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

MANO நாஞ்சில் மனோ said...
வீட்டம்மாவுக்கு மெயில் அனுப்பிட்டேன் இதை
.//

அப்ப பார்சல் வரும்.அதாவது பார்சலில் வரும் குழம்புங்குறீங்க.

நன்றி மனோ

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
பார்க்கவே நல்லா இருக்குதே
//

அப்ப செய்து சாப்பிட்டா எவ்ளோ நல்லாயிருக்கும் இல்லா சித்ராக்கா..

நன்றி மேடமக்கா..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
எல்லாம் செயற்கையான காய்கறியாய் (அதாவது... எந்த நாட்டின் காய்கறியோ) தெரிகிறதே...!
என்ன இருந்தாலும்... என் ஊரின்... என் தெருவின்... என் வீட்டு மர முருங்கக்காய் ருசியே... அப்பப்பா...//

என்ன இருந்தாலும் நம்ம ஊர் காய்கறிபோல் வருமா! இருந்தாலும் இங்கே எந்நேரம் எல்லா காய்களும் கிடைக்கிறது. சிலவைகள் இங்கே பயிரிடப்படுகிறது அதனால் இங்கும் பிரஷாக கிடைக்கிறது சகோ.

ஆனாலும் நம்ம ஊர் முறுங்கை ருசி இங்கு இல்லவேயில்லை..

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
நானும் மெயில் அனுப்பியாச்சு... நீங்க பார்சல் அனுப்பினா நல்லாயிருக்கும்.//

அனுப்பிட்டாபோச்சி
விரிவான அட்ரஸ் எழுதினா வீடுதேடி ஃப்ரியாக டோர் டெலிவரி எப்புடி..
நன்றி குமார்

shalihazubair said...

சேச்சி அருமையா இருக்குதுங்க.

சந்தக்கவி.சூசைப்பாண்டி9578367410 said...

நேரமிருந்தால் என் வலைப்பக்கம் வாருங்கள்
சந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com

Jaleela Kamal said...

இதெல்லாம் நல்ல இல்ல சொல்லி புட்டேன், என்னைய பகக்த்துல வச்சிக்குட்டு இப்படி சாப்பிட கூடாதாக்கும்

apsara-illam said...

என்னடா மணம் தாங்கலையேன்னு வந்து பார்த்தா மலிக்காவுடைய கமகமக்கும் இறால் காய்கறி குழம்பு.... அதுவும் வித்தியாசமாய் தேங்காய் பாலுக்கு பதில் ரயின்போ பால்.... ஸ்ஸ்ஸ்ஸ்...அப்படி உறிஞ்சி ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும்னு ஆசை வந்துடுச்சு.... என்னைக்கு இறால் வாங்க போறேனோ செய்து பார்க்க போறேனோ தெரியாதுங்கோ.... அதனால.... உங்க வீட்டிலிருந்து தம்மாதூண்டு கொடுத்து அனுப்பிடுங்க... சரியா மலிக்கா....

அன்புடன்,
அப்சரா.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.