அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, November 29, 2009

கலவை பூரி



/தேவையானவை/


இடியப்பமாவு 2 கப்
கோதுமை மாவு 2 கப்
உப்பு
ஆயில்
சிறிதளவு சோடாப்பு அல்லது ஜீனீ



இரு மாவையும் கலந்து அதில் உப்பு சோடாப்பு சேர்த்து தண்ணீர் விட்டு  நன்றாக பிசைந்து கொள்ளவும்

பின்பு உருண்டைகள் போட்டு அதை இதேபோல்



சப்பாத்திகட்டையால், அல்லது பிரஸிங் மூலம் நிறைய செய்துகொள்ளவும்

கடாயில் ஆயில் விட்டு சூடானதும்


                                                       ஒன்று ஒன்றாக போட்டு


                                            இதுபோல் இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும்


                                                     
சுவைமிகுந்த பூரி ரெடி!



குழந்தைகள் சிறிய பூரியில் உள்ளுக்குள் கிழங்குவைத்து சாப்பிட விரும்புவார்கள் அவர்களுக்கு இதேபோல் செய்து கொடுக்கலாம்


இதற்கு உருலைகிழங்கிலும் சைடிஸ் செய்யலாம். பூசணிக்காவிலும் செய்யலாம்..

அன்புடன் மலிக்கா

14 comments:

பூங்குன்றன்.வே said...

தோழி...நீங்களும் விதவிதமா சமைச்சிட்டு வரீங்க.என்றைக்கு விருந்து சாப்பிடுவது?

கலகலப்ரியா said...

v.good... try panren..!

malarvizhi said...

வித்யாசமான டிபன் . செய்து பார்கிறேன்.

ஹுஸைனம்மா said...

இதில் சோடா உப்பு போடாமல் செய்தால் வராதா?

அரிசி மாவு சேர்த்து பூரி செய்வதை முதல் முறை பார்க்கிறேன். ;-))

அன்புடன் மலிக்கா said...

/பூங்குன்றன்.வே said...
தோழி...நீங்களும் விதவிதமா சமைச்சிட்டு வரீங்க.என்றைக்கு விருந்து சாப்பிடுவது?/

எப்பவேண்டுமென்றாலும் விருந்து சாப்பிடவரலாம் தோழமையே.

அன்புடன் மலிக்கா said...

/கலகலப்ரியா said...
v.good... try panren../

வாங்க கலகலப்பிரியா. முதல்முறையா வந்திருக்கீங்க,
தொடர்ந்துவாருங்கள் தோழியே...

அன்புடன் மலிக்கா said...

/MALARVIZHI said...
வித்யாசமான டிபன் . செய்து பார்கிறேன்./

வாங்க மலர்விழி எனக்கு தமிழ் பெயர்கள் என்றால் மிகவும் பிடிக்கும் மலரும் விழியும் அழகு..

தொடர்ந்துவாருங்கள் தோழியே...

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
இதில் சோடா உப்பு போடாமல் செய்தால் வராதா?

அரிசி மாவு சேர்த்து பூரி செய்வதை முதல் முறை பார்க்கிறேன். ;-))/

சோடாப்பு சிறிதளவு போட்டால் சற்று உப்பியதுபோல் சூப்பராக வரும் தவிர்த்துவிட்டு வேண்டுமென்றால் ஜீனி சேர்த்து பிசையாலாம்..

நல்ல டேஸ்டாக இருக்கும் ஹுசைன்னம்மா

ஸாதிகா said...

http://shadiqah.blogspot.com/2009/11/blog-post_27.html

இந்த லின்க்கை பார்க்கவும்

பாத்திமா ஜொஹ்ரா said...

wow,wonderful

S.A. நவாஸுதீன் said...

பூரியில் கூட இவ்வளவு வெரைட்டி இருக்கா. அதுசரி

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா பூரி எனக்கு மிகவும் பிடிக்கும்,அரிசி மாவு கலந்து இது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் செய்து பார்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா பூரி எனக்கு மிகவும் பிடிக்கும்,அரிசி மாவு கலந்து இது தான் முதல் முறையாக கேள்வி படுகிறேன் செய்து பார்கிறேன்.

தாஜ் said...

என்ன இன்னைக்கு டிஃபன் செய்ய என்றால் பிள்ளைகள் வாயில் முதலில் வருவது பூரி என்ற சொல்தான்

ஆனா அரிசி மாவு போட்டு செய்ததில்லை இனி செய்து பார்க்கனும்ப்பா நான் ரவை போடுவேன்ப்பா

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.